புற்றுநோய் Cancer in Tamil

புற்றுநோய் என்றால் என்ன?

புற்று நோய் என்ன என்பதை அறியமுன் எமது உடலமைப்பைப்பற்றி முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

கலம் (cell ) என்பது உடலை உருவாக்கும் அடிப்படைப் பொருளாகும்.பல கலங்கள் கலத்திடைப்பொருளால் (inter cellular substance) இணைக்கப்பட்டு இழையங்களை (Tissues ) உருவாக்கும். இவ்விழையங்களின் சேர்க்கையால் அங்கங்கள் (Organs) உருவாகின்றன.

கலங்களுக்கு உதாரணமாக:

  • மேலணி இழையக் கலங்கள் (Surface Epithelial Cell ) பாதுகாப்புத் தொழில் புரிபவை
  • சுரக்கும் இழையக் கலங்கள் (Glandular Epithelial Cell) சுரக்கும் தொழில் புரிபவை
  • தொடுப்பிழையங்கக் கலங்கள் (Connective Tissue Cell) உறுதியளிக்கும் தொழில் புரிபவை
  • தசையிழையக் கலங்கள் (Muscular Cell) தசைச்சுருக்கத்தை ஏற்படுத்துபவை
  • நரம்பிழைக் கலங்கள் (Nerve Cell) கணத்தாக்கத்தை கடத்தும்துபவை
  • செங்குருதிக் கலங்கள் (Red Blood Cell) ஒட்சிசன் (பிராணவாயு),மற்றும் வேறு பதார்த்தங்களையும் கடத்துபவை
  • வெண்குருதிக் கலங்கள் (White Blood Cell) நோயை எதிர்த்து போராடுபவை
ஆகியவற்றை குறிக்கலாம்

இழையங்களுக்கு உதாரணமாக

  • மேலணி இழையம் (Epithelial Tissue)
  • தொடுப்பிழையம் (Connective Tissue)
  • தசையிழையம் (Muscular Tissue)
  • குருதி (Blood)
  • நிணநீர் (Lymph)
என்பனவாகும்

அங்கங்களுக்கு உதாரணமாக

  • இருதயம்
  • மூளை
  • ஈரல்
  • சிறுநீரகம்
  • இரப்பை
  • நுரையீரல்
கருப்(நுகப்) பிரிவின் ஆரம்பத்திலிருந்தே,கலப் பிரவானது சீராக நடைபெற்று உடலில் வெவ்வேறு கலங்கள்,இழையங்கள்,அங்கங்கள் சீரான முறையில் உருவாகின்றது.இவ்வாறாக உருவான உடலின் அமைப்புக்கள் பயன்படத்தக்க முறையில் சீராக தொழிற்படுகின்றன.

சில வேளைகளில் வெவ்வேறு காரணங்களின் நிமித்தம்
(உ-ம்: கர்பமாக இருக்கும் காலத்தில் தொற்று நோய் ஏற்படல்,சில மருந்து வகைகளை பாவித்தல்,கதிர் வீசலுக்கு உட்படல்)

உடலில் மாற்றங்கள் ஏற்படலாம் ,உடலில் சாதாரணமாக உருவாகிய கலங்கள் அழிவதாலும்,புதிய கலச்சேர்க்கையாலும் , தொடர்ச்சியான ஒரு திருத்தம் (Repair) நடைபெற்று வருகின்றது ( இது வளர்ந்தவர்களின் நரம்புக் கலங்களில் நடைபெறுவதில்லை)

பின்பு கூறப்படும் சில காரணங்களால் சிலரில் கலப் பிரிவிலும், வளர்ச்சியிலும் மாற்றம் ஏற்பட்டு ,புதிய வளர்ச்சிகள் (New Growth) உருவாகலாம்.
இவ்வளர்ச்சிகளில் சில வடிவம்,பருமன்,அடுக்கப்பட்ட ஒழுங்குமுறை ,சாதாரண கலங்களை ஒட்டியும் , உடலுக்கு பாதிப்பு விளைவிக்கக் கூடியதாகவும்(Benign Growth) உள்ளன.

அவற்றில் சில காலத்தில் சில வேளைகளில் தீங்கு விளைவிக்கக்கூடிதாக (Malignant Growth) மாறலாம்.

புது வளர்ச்சிகளில் மற்றும் சிலவற்றில் ஆரம்பத்திலிருந்தே , கலங்கள் ஒழுங்கினறி வெவ்வேறு பருமன் அமைப்பு ஆகியவற்றுடன் உருவாகி அருகிலுள்ள இழையங்களைத் தாக்குவதுமல்லாமல் உடலின் வெவ்வேறு பாகங்களுக்கு பரவி உடல் தொழில்களைப்பாதிக்கவும் செய்கின்றன.

இவ்வளர்ச்சிகள் தீங்கான வளர்ச்சிகள் (Malignant Growth) அல்லது புற்று நோய்(Cancer) என அழைக்கப்படுகிறது


புற்று நோயானது அது உருவாகும் கலத்தை அடிப்படையாகக் கொண்டு பலவகைகளாகும்.
  • மேலணிக்கலங்களிருந்து உருவாகுபவை காசிநோமா (Carcinoma) என்றும்.
  • தொகுப்பு இழையங்களிருந்து உருவாகுபவை சாக்கோமா (Sarcoma) என்றும் அழைக்கப்படுகின்றன.
இவைகள் மேலும் எவ்வெவ் வகை கலங்களிருந்து எழுவதை ஒட்டி வெவ்வேறு வகைகளாகும்

உ-ம்:
  • ஸ்குவோமஸ் காசினோமா (Squamous Carcinoma) ஆனது தோல்,களம் (உணவுக்குழாய்), வாய் முதலியவற்றின் மேலணியிலிருந்து (Squamous cell) உருவாகின்றன.
  • அடினோகாசினோமா (Adeno carcinoma) இரப்பை,சதையி (Pancreas),ஈரல்(Liver) என்பவற்றிலிருந்து உருவாகின்றது.
  • ரான்சிசனல் கலம் (Transitional cell Carcinoma) சிறு நீர்ப்பையிலிருந்தும்,
  • ஒஸ்ரியோ சாக்கோமா (Osteo Sarcoma),
  • லிம்ஃபோ சாக்கோமா (Lympho sarcoma) ,
  • ஃபைபிரோசாக்கோமா (Fibro sarcoma) என்பன முறையே எலும்பு நிணநீர்க்கலங்களிருந்து உருவாகின்றன. 
  • இலுக்கீமியா (Leukamia) வெண்கலங்களிருந்து உருவாகின்றன இவற்றை விட வேறு பலவகைகளும் காணப்படுகின்றன அவை அதி முக்கயத்துவம் அற்றவை
புற்றுநோயானது அண்மையிலுள்ள இழையங்களுக்கு மட்டுமல்லாமல் வெவ்வேறு அங்கங்களுக்கும் குருதிழைக்குழாயினூடாகவும்,நிணநீர் குழாயினூடாகவும் பரவுகின்றன.இவ்வாறான பரவல் பொதுவாக நிணநீர்க்கணுக்கள் (நெறி-Lymph Node) ) நுரையீரல்,ஈரல்,எலும்பு,மூளை என்பவற்றிற்கு நடைபெறுகின்றது.

புற்றுநோய் உடலுக்கு பலவழிகளால் கேடு விளைவிக்கிறது.

பொதுவிளைவுகளில் உடம்பு மெலிதல்,இரத்தச்சோகை என்பன சிலவாகும்.(இவ்விளைவு எல்லா வகைகளிலும்,எல்லோராலும் ஏற்படமாட்டா) புற்றுநோயின் வகையைப் பொறுத்து வெவ்வேறு விளைவுகள் ஏற்படும்.

  • களத்தில் ஏற்படும் புற்றுநோய் விழுங்கப்பட்ட உணவு உட்செல்வதைப் பாதிக்கும்.
  • பெருங்குடலில் எழும் கட்டி மலச்சிக்கலுக்கும் மலவாசலினூடாக இரத்தம் சீதம் செல்வதற்கு காரணமாகும்.
  • சிறுநீரகத்தில் ஏற்படும் கட்டிகள் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவதில் கஷ்டத்தையும்,
  • மூளையில் ஏற்படும் புற்றுநோய் பாரிசவாதம்,கண் பார்வை கோளாறு,தலையிடி வேறு கோளாறுகளையும் ஏற்படுத்தலாம்.
  • பரவல் நேரிடும் பொழுது குருதிக் குழாய்களையும்,நரம்புகளையும் பாதிப்பதால் இரத்த இழப்பு நோ ஏற்படும். சில புற்றுநோய்கள் ஓமோன்கள்(Hormone) சுரப்பதால் விளைவு ஏற்படும். 
  • தூரப்பரவல் ,நுரையீரல்,ஈரல்,எலும்பு,மூளை அங்கங்களின் தொழில்களை பாதித்து கேடு விளைவிக்கின்றன
புற்றுநோய் உடலுக்கு ஏற்படுத்தும் தீங்குகளின் உக்கிரம் பல காரணிகளில் தங்கியுள்ளது இவ்வுக்கிர வேறுபாடு புற்றுநோய் எவ்வகை மற்றுமல்லாது ஒரே வகை வௌ;வேறு நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்தும் ஏற்படும் புற்றுநோயின் வகை என்னும்போது பலஅம்சங்களை தங்கியுள்ளது:
உருவாக்கப்பட்டுள்ள கலத்தின் வகை, அக் கலங்களின் வடிவத்திலும் பருமனிலும் ஏற்பட்ட மாற்றத்தின் அளவு, புற்றுநோய் கட்டி வளரும் வீதம்,உடலில் உருவாகிய அங்கம் ஏனைய உடற்பாகங்களுக்கு பரவியுள்ள அளவு இவை யாவற்றையும் அடக்கியுள்ளது.

உ-ம்: சாக்கோமா குறைந்த வயதிலேயே தோன்றி விரைவில் பரவி காசினோமாவை விட அதிகளவில் தீங்குவிளைவிக்கும் காசினோமப என்பவற்றிலேயே சில ஏனையவற்றை விட அதிகளவில் தீங்குவிளைவிக்கும்

உ-ம்: ஈரலில் உண்டாகும் காசினோமா மார்பில் ஏற்படும் காசினோமாவை விடக்கூடிய தீங்கு விளைவிக்கும் நிறம் கூடிய தோலில் உருவாகும் புற்றுநோய் நிறம் குறைந்ததை விட கூடிய விளைவை ஏற்படுத்தும்

மேற் கூறப்பட்டவற்றிலிருந்து புற்றுநோயானது பற்பல வகையாகவுள்ளதென்றும் வெவ்வேறு வகைகள் மனிதரில் வெவ்வேறு விளைவுகளை உருவாக்கிறதென்றும் தெளிவாகின்றது

  1. புற்றுநோய் தோற்றத்தில் ஈடுபடும் காரணிகள்
  2. புற்றுநோயை தடுக்கும் முறைகள்.
  3. புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்.

No comments:

Post a Comment