Monday, June 29, 2015

15 Forgotten Life Lessons

மறக்கக்கூடாத விடயங்கள்

21ம் நூற்றாண்டில் வாழும் மனிதர்களின் வாழ்கை முறையானது இயந்திரத்தனமானக இருக்கிறது ,நேரத்திற்க்கு முக்கியத்துவமும் கொடுத்து மகிழ்ச்சியையும்,நிம்மதியையும்  ஏன் , வாழ்க்கையில் பல விடயங்களை தெரிந்து கொண்டு இழக்கிறான்.

ஏன்? எப்படி? எனப் பார்க்கையில்,

அங்கே பணம் சம்பாதிக்கும் எண்ணத்திலே குறியாக இருப்பது என்பது தெளிவாகிறது.

இதனை இனி மாற்றமுடியாது. உலகம் போகிற போக்கில் சென்றால்தான் நாமும் வாழலாம் ஆனால் சில மறக்ககூடாத பழக்கவழக்கங்களை பின்பற்றினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ,நிம்மதி ,போன்ற எந்த வெரு விடயத்திலும் செல்வந்தராக முழு நிறைவுடன் வாழலாம்.


  1. முகபாவம்,சைகை,அபிநயம்,சாடை
    • நாம் மற்றவர்களை சந்திக்கும் போது அல்லது கடந்து செல்லும் போது ஒரு புன்சிரிப்பினால் நேர்மறையான எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.
  2. தரம் ,அந்தஸ்து, மதிப்பு என்ற மன உணர்வு.
    • மேற்கூறப்பட்ட மன உணர்வென்பது தன்னைத்தானே இழிவுபடுத்தும் செயலாகும்.இவ் எண்ணம் சிந்தனையால் மற்றவர்களால் வெட்கப்படும் நிலைக்கு ஆளாக நேரிடலாம் ஆகவே சற்று கீழே இறங்கினால் மனதிற்கும் பழகுவருக்கும் இனிமையாகும்
  3. முக்கியமான சந்தர்ப்பத்தில் நழுவுதல்
    • முக்கியமான சந்தர்ப்பத்தில் நழுவாமல் இயலுமான உதவிகளையோ,தீர்வுகளையோ கட்டாயம் செய்யவேண்டும்.
  4. எந்தவெரு பொருளையும் வழங்காது இருத்தல்
    • பொருட்களின் தேவை,தேவையின்மை என்பதைப்பொறுத்தும் ,அப்பொருட்களின் ஆயுள்காலத்தை கருத்தில் கொண்டு மதிப்பறிந்து வழங்கவேண்டும்
  5. எல்லோரும் தம்மை விரும்பமாட்டார்கள்
    • தான் இவ் உலகத்தில் உள்ள அனைவராலும் விரும்பதக்க மனிதன் என்ற சிந்தனை, இறுமாப்பு இல்லாமல் தன்னை வெறுப்பவர்களும் உண்டு என்ற சிந்தனையுடன் இருத்தல்
  6. எந்தவெரு விடயத்திலும் உரிமையுடைவராக இருத்தல்
    • எந்தவெரு விடயத்திலும் உரிமையுடைவராக இருக்க வேண்டுமெனில் உரிமைகளை இழந்தல் மாத்திரமே
  7. எல்லா செயல்களுக்கும் காரணம் உண்டு
    • ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ் வேறான எண்ணம் சிந்தனைகள் இருப்பதினால் சில வேளைகளில் செயல்களை தடைப்படுகின்றன.
  8. சிரிப்பால் அணுகுதல்
    • நீ உலகைப்பார்த்து சிரித்தால் உலகம் உன்னைப்பார்த்து சிரிக்கும்
  9. கீழ்தரமான ,இழிந்த,மட்டமான,பகையெண்ணங் கொண்டு அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்தல்
    • ஒரு விடயத்தை ஞாபகம் வைத்திருக்க வேண்டும்  கீழ்தரமான இஇழிந்த எண்ணங்களுடன் யாரும் பிறப்பதில்லை ஏதோ ஒருவிதத்தில் அவ்வெண்ணங்களை எதிர்த்து சமாளித்து செல்லவேண்டும்
  10. ஆரேக்கியமான உறவுமுறை பேன முடிவெடுப்பதில் நிதானம்
    • ஆரேக்கியமான உறவுமுறை பேண சிந்திக்காமல் அவசரமாக எடுக்கும் முடிவுகளால் பல பாதகங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் ,தவிர்ப்பதானால் முடிவெடுக்கையில் ஒரு படி பின்வாங்கினால் நீண்ட ஆரோக்கியமான உறவு முறையைபேணலாம்.
  11. ஓவ்வொரு வெற்றியையும் பெரிதாக கொண்டாடல்
    • நோக்கம் நிறைவேற்றப்படுகையில் வெற்றி கிடைக்கப்பெறுகிறது. இதனால் புகழின் உச்சத்திற்கு செல்ல அவ்வெற்றியை கொண்டாடுகிறார்கள் எல்லா வெற்றிகளையும் ஒரு நாளில் கொண்டாடினால் ??
    • உதாரணமாக  ,நீங்கள் நோபல் பரிசில் வெற்றிபெற்றால் என்ன செய்வீர்கள்?
  12. எண்ணம் சிந்தனைகளுக்கு ஒத்துப்போகாதவர்களுடன் சிநேகம் வைக்காமை
    • அன்றாட வாழ்க்கையானது நல்ல உணர்வுமிக்கதாக அமையவேண்டும்,இவ் உணர்வை சிதைக்கும் எண்ணங்களுடன் இருப்பவர்களை அன்றாட வாழ்வில் அடையாளம் கண்டு களை அகற்றவேண்டும்.
  13. பன்மடங்கு பலன் தரத்தக்க காரியத்தில் ஈடுபடல்
    • மனக்கிளர்ச்சி , உணர்ச்சி வேகம் ,  உள எழுச்சி  ஆகியவற்றிற்கு முக்கியத்தவம் கொடப்பதானால் சொந்த அறிவை பயன்படுத்தி முடிவெடுத்து செயலில் இறங்கினால் பலன் பன்மடங்டகாகும்.
  14. தான் விரும்பும் துறையுடன் சேர்ந்த அனைத்து துறைகளுடனும் தொடர்பில் இருத்தல்
    • மனிதனுக்க முக்கியமானது தான் விரும்பும் துறை தவிர்ந்த மற்றைய துறைகளில் சிறிதளவெனும் அறிவு இருக்கனும்.இல்லாவிடில் மற்றவர்களால் சூரையாடப்படலாம் உதாரணமாக வியாபாரத்துறையை எடுத்துக் கொண்டால்  நீதி,நிதி,.பிரயாணம்,குற்றவில் போன்ற துறைகளில் அனுபவம் வேண்டும்
  15. மற்றவர்கள் எப்படியான மனத்துடன் பழகுகிறார்கள் என்பதில் அவதானம்
    • சிலர் பழக இனிப்பாக இருப்பார்கள் ஆனால் மனநிலையையானது கீழ்த்தரமானதாக இருக்கும் கண்டுபிடிப்பது கடினம்
சில சில காரணங்களின் நிமர்த்தம் அன்றாடவாழ்வில் கவலையினம்,சோம்பல்,பாவம் பார்த்தல் ,அடிமை எண்ணத்துடன் இருத்தல் போன்ற காரணங்களால் சில விடயங்களை தெரிந்தும் மறந்த விடுகிறோம் அவற்றால் ஏற்படும் அவமானத்திற்கும் முகம் கொடுக்ககூடி சூழ்நிலையை உருவாக்கிக்கொள்கிறோம் மேற்கூறப்பட்ட 15 விடயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டால் நன்று .

புற்றுநோய் தோற்றத்தில் ஈடுபடும் காரணிகள் -Reason for Cancer

இந்நோய் உருவாகுவதற்கு என்ன காரணங்கள் என அறிதல்,இதைத் தடுப்பதற்கு உதவும் கலத்தில் அடிப்படையில் எம்மூலகாரணத்தால் உருவாகின்றது என கண்டுபிடிக்கப்படவில்லையாயினும் இதன் தோற்றத்தில் ஈடுபடும் அல்லது பங்களிக்கும் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவற்றை
  1. பொதுவான காரணிகள் (General Factors) எனவும்.
  2. குறிப்பான காரணிகள் (Specific Factors )எனவும் பிரிக்கலாம்.

பொதுவான காரணிகள்

  1. பரம்பரைக் காரணி (Genetic or Hereditary)
    • புற்றுநோய் பரம்பரையாக தோற்றுவதில்லை என்பது (சில மிக அரியவகைகளை விட) உறுதியாக தெரிந்ததே. மிகஅரிய வகைகளும் மிகவும்  குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.சிலருக்கு புற்றுநோய் உருவாகுவதற்கு பரம்பரையை சேர்ந்ததல்லாத அதிக வாய்ப்புக்கள் (Prides position) இருப்பதால் வேறு காரணிகள் இவர்களில் இலகுவில் புற்றுநோயை தோற்றுவிக்கக் கூடும். புற்றுநோய் குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டால் மற்றோருக்கும் ஏற்படுமென அச்சம் கொள்ளத் தேவையில்லை (ஒரே வகையான புற்றுநோய்க்கு மாத்திரம்)
  2. வைரசுக்கள்(Viruses)
    • இவை மிருகங்களில் புற்றுநோயை உருவாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பின், மனிதரில் மிகச் சில வைரசுக்களே இதற்கு காரணமாக உள்ளன (உ-ம்: கெப்பறைரிஸ் பி வைரஸ் Hepatitis B Virus ,எப்ஸ்ரையின் பார் வைரஸ் Epstein Barr Virus  இவை ஈரலிலும் மூக்குத்தொண்டையிலும் நிணகணுக்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
  3. ஓமோன்கள் (Hormones)
    • இவற்றால் உண்டாகும் சில புற்றுநோய்கள், சில அங்கங்களில் சிலரில் மட்டுமே ஏற்படுகின்றது 
      • உ-ம்: மார்புப் புற்றுநோய் (Breast) புறொஸ்ரேற் (Prostate) கருப்பை புற்றுநோய்(Cervix
  4. அதிகளவு மன நெருக்கம் (Mental Stress)
    • இதனால் ஓமோன்கள் சுரக்கப்பட்டு இவை காரணமாக அமையலாம் ஆனால் இன்னும் இதற்கு போதியளவு ஆதாரங்கள் இல்லை
  5. புற்றுநோயை உருவாக்ககூடிய பதார்த்தங்கள் (Carcinogenic Agents)
    • இவை பெரும்பாலும் பௌதீகம் (Physical) அல்லது இரசாயண (Chemical)பதார்த்தங்கள்.இவை பெரும்பாலும் குறிப்பிட்ட சில தொழில்களைச் செய்பவர்களை பாதிக்கிறது
  • பௌதீக காரணிகள்
காரணி
தொழில்
நோய் எழும் அங்கம்
அயனியாகும் கதிர் வீசல்
Ionizing Radiation
ரேடியம் சுரங்கம்>மருத்துவம்சிகிச்சை> ஆய்வு நிருமாணித்தல்
இயற்கை (சூரியன்)
மருத்துவம்-சிகிச்சை
பைப் புகைத்தல்(pipe)
எலும்பு>தோல்
வெண்கலம்>
மூளை>மார்பு>
பெருஙகுடல்>கேடயச் சுரப்பி  (Thyroid)                     
பிற ஊதாக்கதிர்கள்  
(Ultra violet Radiation )
இயற்கை (சூரியன்)
மருத்துவம்-சிகிச்சை
தோல்
வெப்பக் கதிர்கள்  (Thermal)
பைப் புகைத்தல்  (Pipe)
உதடு >வாய்



இரசாயனக் காரணிகள்


புகைக்கரி>கரித் தார்>தாது எண்ணை
சுரங்கம்
நுரையீரல்>தோல்
அறேமற்றிக் அமின்ஸ் 
(Aromatic Amine)
சாயம் தொகுப்பு
சிறு நீர்ப்பை
நப்தலமின்ஸ்
(Naphtali Mines)
ரப்பர் கயிறு
சிறு நீர்ப்பை
வெப்பத்தார்>
அஸ்பெஸ்ரோஸ்(Asbestos)
குறேம் உலோகத்தாது
 (Chrome Ore)
நிக்கல் உலோகத்தாது 
 (Nickel Ore)
சுரங்கம்
நுரையீரல்
மரத்தூசி>ஐசோபுரோபிலீன் (Iso propylene)
நிக்கல் உலோகம் தாது
மர வேலை >தோல் பதனிடுதல்>
சுரங்கம்
நாசிக்குடா  
(Nasal Sinuses)
போலிவீனைல் குனோறைட்(PVC)
தாயரித்தல்
ஈரல்
கிருமிநாசினிகள்
துணி தாயரித்தல்
கமம்>தயாரித்தல்
சிறு நீர்ப்பை> நாசிக்குடா>நுரையீரல்
  • பூஞ்சணத்தில் உள்ள அப்ஃளா ரொக்சின் (Aflatoxin) உணவு வகைகளில் (பனம்மா ,பனங் கிழங்கு,நிலக்கடலை)சேர்ந்து ஈரலில் நோய் ஏற்படுத்தும்.
இக்காரணிகள் யாவரையும் பாதிப்பதில்லை நோய் ஏற்படுவது குறிப்பிட்ட காரணியின் பாதிப்புத்தன்மை காரணியின் விசை அல்லது அளவு, உடலைத்தாக்கிய நிலை முதலியவற்றில் தங்கியுள்ளது.
  • நீடித்த காலமாக உடலைப்பாதித்து வரும் நோய்கள்
    • சில சாதாரணமான நோய்களும் நீடித்தகாலமாக உடலைப்பாதிக்கும்போது புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன
      •  உ-ம்: தோலில் ஏற்படும் புண்கள்,சிறு நீரகத்தில் அல்லது பித்தப்பையில் கற்கள்,இரும்புச்சத்து குறைவால் உண்டாகும் இரத்தச்சோகை,மதுவால் உண்டாகும் ஈரல் சுருங்கள் (Cirrhosis) முறையே வாய்,களம்,ஈரல் என்பவற்றில் புற்று நோய்க்கு வழிவகுக்கலாம்
  • சில தீங்கற்ற வளர்ச்சிகள் 
    • உ-ம்: பப்பிலோமா(தோலில் ஏற்படும் தீங்கற்ற வளர்ச்சி), வாயில்,ஆண் உடம்பில் ஏற்படும் வெண் தடிப்பு (Leukemia),சில காலத்தில் தீயவளர்ச்சியாக மாறலாம்.
  • குறிப்பான காரணிகள்
    • உணவில் உயிர்ச்சத்து ஏ,இரும்புச்சத்து என்பனவற்றின் பற்றாக்குறைவு- வாய்,களம்,இரப்பை என்பவற்றில் புற்றுநோய் தோன்றும் வீதத்தை அதிகரிக்கலாம்
    • அதிகளவில் கொழுப்புச்சத்தையும் (பிரதானமாக விலங்கு கொழுப்பு) அதிகளவு புரதத்தையும் உட்கொள்வதால் ,பெருங்குடல்,கருப்பை ,மார்பு,சிறு நீரகம் என்வற்றில் புற்றுநோய் வீதம்அதிகரிக்கின்றது.ஆனால் எமது நாட்டில் செல்வந்தரைத் தவிர ஏனையோருக்கு இது காரணமல்ல
    • நார்த்தன்மை குறைந்த உணவு பெருங்குடலில் நோயை ஏற்படுத்தலாம்.இதுவும் எம்நாட்டில் அரிதாகவே காரணமாகும்.
    • அதிக காப்பி அருந்துவது அதுவும் புகைத்தலுடன் சேர்ந்தால் சதையி,சிறுநீரகம் ஆகியவற்றில் புற்றுநோயை உண்டாக்கலாம்
    • பூஞ்சணம் பிடித்த பனம் கிழங்கு, பனம் மா , நிலக்கடலை தொடர்ந்து பாவித்தால் ஈரல் புற்றுநோய் ஏற்படும்
    • அதிகளவில் உப்பை கொண்ட மீன் சாப்பிடுதல் களத்தில் புற்றுநோயை ஏற்படுத்தலாம்
    • செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கு சேர்க்கப்பட்ட சில பதார்த்தங்கள்- ஈரல்,இரப்பை,சிறுநீரகம் என்பவற்றில் புற்றுநோய் வீதத்தை அதிகரிக்கலாம்
    • மிகவும் சூடான உணவு உட்கொள்வதால் வாய்க் குழியிலும் களத்திலும் புற்றுநோய் வாய்ப்பு அதிகரிக்கலாம்
    • கறிகளுக்கு சேர்க்கப்படும் சரக்குகள் அதிகவாயின் வாய்க்குழி,களம்,இரப்பை ஆகியவற்றின் புற்றுநோய் தோன்றும் வீதத்தை அதிகரிக்கலாம்
  • புகைத்தல்
    • புகைத்தல்-புகையிலுள்ள நிக்கொட்டின் எனும் பதார்த்தம்,புகையிலை எரியும்பொழுது உண்டாகும் வேறு பதார்த்தங்களும் நுரையீரலிலும் வேறு அங்கங்களிலும் புற்றுநோயை உண்டாக்கலாம்.பாதிக்கும் தாக்கச் சந்தர்ப்பம் ஒருவர் புகைக்கும் அளவு , நிக்கொட்டின் அளவு,புகைத்தலுடன் மதுபாணம் பாவித்தல்  என்பவற்றில் தங்கியுள்ளது
  • மதுபாணம்
    • பெரும்பாலும் வாய்க்குழி,களம்,ஈரல்,சிறுநீர்ப்பை என்பவற்றில் காரணியாகலாம்.புகைத்தலும் சேர்ந்தால் தாக்கச் சந்தர்ப்பம் அதிகரிக்கும்
  • வெற்றிலை சாப்பிடுதல்
    • வாய்க்குழியில் புற்றுநோய் ஏற்படலாம் ,வெற்றிலையுடன் சேர்க்கும் புகையிலையே முக்கிய காரணமாகும்.சக்கையை பலநேரம் வாய்குழியில் வைத்திருப்பதும் காரணமாகும்.சக்கையை,சாறை விழுங்குவதாலும் களத்திலும், இரப்பையிலும் புற்றுநோய் ஏற்படலாம்.எம் நாட்டில் ,வாய்க்குழி,களம்,இரப்பை புற்றுநோய் மிக மிக அதிகம்.எனவே இவ்வழக்கம் முற்றாக நிற்க வேண்டும்.நிற்பாட்ட முடியாதோர் மிக குறைந்த அளவில் புகையிலை சேர்க்காமல் பலநேரம் வாயக்குழியில் வைக்காமல் சாப்பிடவேண்டும் சக்கையை சாறை விழுங்கப்படாது
  • முன் கூறிய பொது காரணங்களின் அமைப்பில் தொழில்,சுற்றாடல் சம்பந்தப்பட்ட காரணிகள்.
  • சில மருந்துகள்
    • மிகமிக சில மருந்துகள் தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பம் உண்டாகின்றது

Sunday, June 21, 2015

கல்லீரலை ஊறு செய்யும் பழக்கவழக்கம் Liver damaging habits

நல்ல ஓய்வும் 
நல்ல நித்திரையும்  (தூக்கம்)

கல்லீரலையும் மற்றை உறுப்புக்களை பாதுகாப்பது ஓர் உன்னத பழக்கவழக்கமாகும் .

ஆனால் உங்களால் நன்றாக தூங்க முடியவில்லை ,மன உலைச்சல் என்பன இருந்தால் உங்கள் உடம்பில் ஏதோ வெரு தேவையில்லாத நச்சுப் பொருள் உடம்பினுல் ஊடுருவி அது ஆட்டிப்படைக்கிறது என்பதை  தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

கல்லீரல்
கல்லீரல்  (Liver)

கல்லீரலை பாதிக்கும் நமது அன்றாட பழக்கவழக்கங்கள்

  1. இரவில் அதிக நேரம் கண்விழித்திருத்தல்,
  2. மதியம் வரைக்கும் தூங்குதல் .
  3. காலையில் எழுந்தவுடன் சிறுநீர் கழிக்காமை.
  4. கட்டுப்பாடில்லாமல் அதிகம் சாப்பிடுதல்.
  5. காலைச்சாப்பாட்டை தவிர்த்தல்.
  6. தேவையில்லாமல் அதிக மருந்து மாத்திரைகளை பாவித்தல்.
  7. பக்கற்றில் அடைத்த உணவு,செயற்கை சுவையூட்டப்பட்ட உணவு வகைகள், ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளல்.
  8. உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் செய்யும் சமையல் எண்ணெய்களை  உபயோகித்தல் , தேங்காய் எண்ணெய்,ஒலிவ் எண்ணெய்    போன்ற வற்றை தவிர்த்தல்.
  9. அதிக மது பாவனை,புகை பழக்கம்
  10. பொரித்த உணவுகளை களஞ்சியப்படுத்தி உண்பது.
  11. சில காய் கறிகளை பச்சையாகவே  உண்பது.
ஏன்?  இதை எல்லாம் சொல்லுகிறீர்கள், இது சாதாரண விடயம் தானே  என்று நினைத்தீர்கள் என்றால்,?
விளக்கம் அறிய  தொடர்ந்து வாசியுங்கள்.

இயற்கையாக கிடைக்கபெற்ற உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தில் என்னென்ன வேலையை எப்ப ஆரம்பிக்கனும் எப்ப முடிக்கனும் என்ற ஒரு நேரசூசி உள்ளது இதனை எவராலும் மாற்ற முடியாது .

எப்படி எனில்,  

உதாரணமாக  படுக்கைக்கு போக முன் காலையில் குறித்த நேரத்திற்கு எழும்பவேண்டும் என்று நினைத்து தூங்கினால் காலையில் கடிகாரத்தின் அலாரம் அடிக்கமுன் எழுந்துவிடுவோம் ஏப்படி? சாத்தியம் என்று நினைத்ததுண்டா ?

சில முக்கிய விளக்கம் கீழே

உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தின் நேரத்தின் பிரகாரம் 
  1. இரவு 9-11 மணிக்கிடையில் நடப்பவை,
    1. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றும் தொழிற்பாடு நடைபெறும் நேரமாகும் இவ் நேர இடைவெளியில் 
      • செய்யவேண்டியவை
        1. ஓய்வெடுத்தல்
        2. மனதுக்கு இனிமையான இசை,பாட்டு என்பவற்றைக் கேட்டல்
      • செய்யக் கூடாதவை
        1. வீடு கூட்டுதல்
        2. சமையல் பாத்திரங்கள் கழுவுதல்
        3. பிள்ளைகளின் வீட்டு வேலைகளை கவனித்தல்
  2. இரவு 11- 1மணிக்கிடையில் நடப்பவை,
    1. கல்லீரலின் வேலை நடைபெறும் நேரமாகும் இவ் நேர இடை வெளியில் 
      • செய்யவேண்டியவை
        1. நல்ல தூக்கம் 
        2. காற்றோட்டம் உள்ள இடமாக்குதல்
      • செய்யக் கூடாதவை
        1. விழித்திருத்தல்
        2. உடலை வருத்தும் வேலையில் ஈடுபடல்.
  3. விடியற்காலை  1-3 மணிக்கிடையில் நடப்பவை
    1. பித்தப்பையின் தொழிற்பாடு நடைபெறும் நேரமாகும் , இவ்வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருப்போம்
  4. விடியற்காலை  3-5 மணிக்கிடையில் நடப்பவை
    1. நுரையீரல் சுத்திகரிப்பு தொழில் நடைபெறும் நேரமாகும் இந் நேர இடைவெளியில் இருமல் ,சளி ,தும்மல் போன்றவை ஏற்படும் இவற்றுக்கு மருத்துவம் தேவையில்லை சிறிது நேரத்தில் தானாகவே குணமாகும்
  5. விடியற்காலை  5-7 மணிக்கிடையில் நடப்பவை
    1. குடலில் உள்ள கழிவுகளை அகற்றும் வேலை நடைபெறும் நேரமாகும்,கட்டாயம் மலம்கழித்தே ஆகவேண்டும்
  6. காலை  7-9 மணிக்கிடையில் நடப்பவை
    1. சிறுகுடல் ஊட்ச்சத்துக்களை அகத்துறிஞ்சும் வேலைகளை செய்யும் நேரமாகும்,இவ் நேர இடைவெளியில் 
      • செய்யவேண்டியவை
        1. காலை உணவை காலை 7-7:30 மணிக்கிடையில் எடுத்தல்
        2. எண்ணெய் உணவுவகைகளை  பெரும்பாலும் தவிர்த்தல்
      • செய்யக் கூடாதவை
        1. காலை உணவை காலை 6:30 மணிக்கு முதல்  எடுத்தால்  நாளடைவில் குடல் சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகலாம்
நாம் எல்லோருக்கும்  நல்ல பழக்க வழக்கங்களுடன்  உணவுன்று வாழ ஆசைதான் ஆனால் நாம் காலத்துடன் விளையாடுகிறேம், உடம்பானது விளையாட்டுடன் காலத்தை கழிக்கிறது

முக்கியமாக உடம்பிற்கு ஓய்வு கொடுங்கள், நன்றாக நேரத்துடன் தூங்குங்கள்  கல்லீரல் பாதுகாக்கப்படும்

Saturday, June 13, 2015

வாழ்க்கையை ஆனந்தமாக்குவது எப்படி? Happy Life

வாழ்க்கையில் ஆனந்தம் என்பது நாம் நினைத்த காரியங்கள் எவ்வித தங்கு தடையும் இன்றி நிறைவேறினால் ஆனந்தம் தான்.
அக்காரியங்கள் தனக்கும் ,மற்றவர்களுக்கும் நன்மையளிப்பதாக இருந்தால் அவ்வானந்தத்திற்கு அளவே இருக்காது.

ஆனால் ஒரு சிலருக்குத்தான் அவ் ஆனந்த வாழ்க்கை அமைகிறது 
ஏன் ? ,எப்படி ?எதனால்?

வாழ்க்கையில் ஆனந்தம் என்பது பல காரணிகளில் தங்கியுள்ளது அவற்றில் காலம் மிக முக்கியமானதாகும் 

அதாவது நாம்
 நேற்று நினைத்த நாளைய நாள் இன்றாகும்

விளக்கமாக சொல்லப்போனால் நேற்று

எதிர் காலத்தைப்பற்றி  திட்டம் தீட்டுவதில் ஆனந்மாய் இருப்போம் ஆனால் காலமானது நன்றாக திட்டமிட்டு அதன் நடத்தையை காட்டிவிடும்,

எனவே திட்டம் தீட்டுகையில் காலத்தை நன்கு தெளிவாக ஆராய வேண்டும்.

உ-ம்: காலம் அறிதல் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் மிக அழகாக விளக்கியுளார்.

  • ஏன் நாளைய நாள் நம் எண்ணம் போல் இருப்பதில்லை ?

    • இன்றைய நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமை
    • ஆசையினால் முக்கியமானவற்றை மறத்தல் அல்லது இகழுதல்
    • விடயத்தில் போதிய அனுபவம் இன்மை ,ஆலோசனை இன்மை
    • தமக்குரிய பதவி,பணம்,இடம்,உணவு.... போன்றவற்றில் அதி கவனம் தேவை  இரு முறை சிந்தித்து முடிவு எடுக்காமை.
    • ஜோதிடத்தில் தெளிவற்ற நம்பிக்கை.
    • மன இயல் சாத்திரம் உளவியல் ,நடத்தையியல் என்பவற்றில் தேர்ச்சி  அற்ற நிலை.
    • எவ்வித பொறுப்பற்ற நிலை
    தொடரும் .....

Sunday, June 7, 2015

தலாய் லாமாவின் மனிதன் யார்? Who is human ?

அன்மையில் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டகேள்விக்கு ஆனது

 மனிதன் யார்?

விளங்கப்படுத்துவது எப்படி ?

என்று தெரியாமல் இணையத்தில் தேடுகையில் தலாய் லாமா என்ற திபேத் நாட்டு பௌத்த துறவியின் தற்போதைய மனிதன் யார் என்ற கருத்தை உங்களிடம் பகிர்கையில் மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் சொல்லுகிறார் மனிதனைப்போல் ஆச்சரியபடத்தக்கக்கூடி ஓர் விஷேட உயிரினமாகும் ஏனெனில்,

முக்காலம் இருப்பதை நன்கு அறிந்தவன் (இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம்) ஆனால் பணம் என்னும் விடயத்தில்,

தற்போதைய மனிதன் எப்படி உள்ளான் என்பதை சிறு சிந்தனை மூலம் விளக்கம்கொடுத்திருந்தார்.

  • அவன் பணம் சம்பாதிப்பதற்காக
    • ஆரேக்கியம்
    • குடும்பம்
    • அவமானம்,தன்மானம்
    • பொய் சொல்லுதல்
    • சிநேகிதம்
போன்ற வற்றை தியாகம் செய்கிறான்,
தியாகம் செய்தவற்றை மீண்டும் பெற சம்பாதித்த பணத்தை (செல்வம்) தியாகம் செய்கிறான் ( உ-ம் : மருத்துவம்,கடன், குடும்ப ஒற்றுமை .....)

  • நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான் இதனால்  (உ-ம் : கடன்,மாளிகை போன்ற வீடு, வாகணம்  ...)  நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நிம்மதியாக வாழமுடியாமல் தவிக்கிறான் .
  • தனக்கு இறப்பே இல்லை என்ற இறுமாப்புடன் நீதி தவறி வாழ்கிறான் ஆனால் இறுதியில் வாழாமலே சாகிறான்
இதுதான தலாய் லாமாவின் தற்போதை மனிதன் என்பதற்கான அவரின் விளக்கம் முடிந்தால் நீங்களும் உங்களுடைய கருத்தை Comments box ஊடாக இவ்வுலகிற்கு தெரியப்படுத்தவும் .

 மனிதன் யார்?
தலாய் லாமா





Wednesday, June 3, 2015

கல்லீரலில் கொழுப்பு படிவு - Fatty Liver (steatosis)

இதனை கொழுப்புமிகு ஈரல் என்றும் அழைக்கலாம்

எம்மில் நிறையப்போருக்கு கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பற்றியும் அதன் பக்கவிளைவுகள்,எதனால் கொழுப்பு படிகிறது என்ற அலட்சிய அறிவுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக பாசி எப்படி தான் வளரும் இடத்தையும் வளர்வதற்க்கு தேவையானா ஊட்ச்சத்துக்களும் கிடைக்கும் இடத்தையும் தேர்ந்தெடுத்து அது  மெதுவாக வளரும்,
வளர்ந்து வருகையில் எந்தவெரு தொல்லையும் இராது,
 நாம் சறுக்கி (வழுக்கி) விழுந்து கை,கால் என்பவற்றில் காயம் ஏற்பட்ட பின் தான் புத்தி வரும் பாசியை அகற்றவேண்டும் என்று அதுவரைக்கும் அன்றாடம் பாசி தெரிந்தும் தெரியாதுபோல் இருப்போம்.

அதே போலத்தால் கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு படிவானது எந்தவொரு அறிகுறிகளையும் காட்டாது வளர்ந்து கொண்டிருக்கும் நன்றாக படிந்த பின் தான் அதன் குணத்தைக்காட்டும்.

கல்லீரலின் தொழிற்பாடு

  உண்ணும் உணவு,குடிக்கம் குடிவகைகள் என்பவற்றில் உள்ள நச்சுப்பாதார்த்தங்கள் ,கொழுப்பு என்பன நேரடியாக இரத்த ஓட்டத்தில் கலப்பதை பித்த நீருடன் சேர்ந்து ஒரு வடிதட்டாக செயல்பட்டு தடுக்கிறது. இதனால் மற்றைய அவயவங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

கல்லீரலில் கொழுப்பு படிவினால் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள்

  • ஆடிக்கடி வயிறு ஊதுதல் (உப்பிசம்)
  •  பசியின்மை
  •  நிறை குறைதல் (உடல் உழைப்பின்றி ,காரணமின்றி)
  • களைப்புத்தன்மை (சோர்வு)
  •  மருத்துவம் தேவைப்படாத வயிற்று வலி (சாதுவான வலி)
  • உண்ட உணவு செமிக்க நீண்ட நேரம் எடுத்தல்.
  • அடித்தொண்டையில் கசப்பு தன்மையை உணர்தல்.
50- 60 வயதைத்தாண்டினவர்கள் சற்று கவனமாக மேற் கூறிய அறிகுறிகளில் தென்பட்டால் கட்டாயம் வைத்திய ஆலோசனை பெறவேண்டும்.

கல்லீரலில் கொழுப்பு படிவிக்கான மூல காரணங்கள்

இரண்டுவகைகளாகப் பிரிக்கலாம்
  1. மது இல்லாத கல்லீரல் கொமுப்பு படிவு
  2. மதுவினால் கல்லீரல் கொமுப்பு படிவு
மேலும்,
  1. அதிகமாக மது அருந்துதல் (Heavy alcoholism).அல்லது மது அருந்தாவர்களும்
  2. நொறுக்குத் தீனிகள். 
    • குழந்தைகள் அடிக்கடி விரும்பி சாப்பிடுகின்ற நொறுக்குத் தீனிகள்
  3. சில நஞ்சுப்பொருட்கள் உட்கொள்ளல் (Toxins).
    •  சில உணவுகளில் ருசிக்காக சில இரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றவை
    • குளிர்பானங்கள்  
    • பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ்
    • உணவுப் பொருள் கெடாமல் இருக்க பாவிக்கப்படும் சில இரசாயனங்கள்
  4. குறிப்பிட்ட மருந்து வகைகள் (Cretin drugs).
    • Aspirin
    • Steroids
    • Tamoxifen
    • Tetracycline
  5. இரத்தத்தில் கொழுப்பின் அளவு பரிந்துரைக்கப்பட்டதை விட அதிகமாக இருத்தல் (High blood Cholesterol).
  6. இரண்டாம் வகையான நீரழிவு (Type 2 Diabetic ).
  7. ஓரே இடத்தில் அதிகநேரமாக இருத்தல் (Obesity).
  8. வைரஸ்.(ஹெப்பாடிட்டீஸ்)
  9. கர்ப்பகாலம் (pregnancy ).
  10. ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition)
  11. அனுசேபப் பிணி (Metabolic Syndrome)
    • ஜீரண மண்டல பாதிப்பு

எப்படி கல்லீரல் கொழுப்பை கண்டுபிடிப்பது?

  1.  வைத்திய நிபுணர்  - பார்த்து , கேட்டு ,தொட்டுணர்ந்து நோய் நாடல் .(Physical examination)
  2. இரத்தப் பரிசோதனை(Blood Test)
  3. கழி ஒலி பரிசோதனை(Ultra sound)
  4. கல்லீரல் இழைய சோதனை(Liver Biopsy)

கல்லீரல் கொழுப்புக்கான மருத்துவமும் தடுக்கும் முறைகளும்

  1. மதுபானத்தை கட்டுப்படுத்துதல் / தவிர்த்தல்.
    • எலுமிச்சை சாறு சேர்த்த நீரை பருகுதல்
    • திராட்சை ஜுஸ், கேரட் ஜுஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடு
  2. இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கட்டு படுத்தல்
    • வீட்டில் தயாரித்த உணவு
    • பூண்டை தினசரி சமையலில் சேர்ப்பது
    • உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும்
    • அசைவ உணவுகளை தவிர்ப்பது நன்று
    • உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  3. உடல் நிறையை குறைத்தல்
    • ஏரேபிக் நடனம்(Aerobic Dance)
    •  ஓரளவு வேகமான நடை
  4. இரத்தத்தில் சக்கரையின் அளவை பராமரித்தல்
    • இளநீர், கரும்புச்சாறு அருந்துதல்.
    • பகுத்தறிந்து உண்ணல்
கல்லீரல் கொழுப்பானது ஆபத்து  என்றாலும், படிப்படியாக குறைக்கலாம் எப்படி என்றால் ?

உடல் பருமனைக் குறைக்கும் போது (உடற்பயிற்ச்சி,உணவு வகைகள்) ,

கல்லீரலில் உள்ள கொழுப்பானது தானாகவே கரைந்துவிடும்.

அதாவது கலோரி கட்டுப்பாடு காரணமாக கல்லீரலில் உள்ள  கொழுப்பு தானாகவே குறையும்.எனவே இயற்கை முறையினால் உடல் பருமனைத் குறைத்தால் வெற்றி தான்

Monday, June 1, 2015

புகைத்தலை எப்படி கைவிடுவது? How to give up smoking in Tamil

புகைத்தலை செய்வது மனிதன் மாத்திரம்,
ஏன் புகைக்கிறான்?
புகைத்தல் நன்மையா? , தீமையா?

ஒன்றை நினைவில் வைத்திருக்கவேண்டும் ஆறறிவுள்ள மனிதன் புகைத்தலை செய்கிறான் என்றால் அதில் ஏதோ ஒரு ஒன்று இருக்கவேண்டும்?
சரி இதில் என்ன இருக்கிறது என்று ஆராய புகை குடிப்பவதுகளிடம் விசாரித்தால் அவர் சொல்லும் காரணம்
  • நிம்மதியான சூழ்நிலை அனுபவிக்க
  • காலைக் கடன்களை கழிக்க
  • மன இறுக்கத்தை தளர்வுசெய்ய
  • போதையை அதிகரிக்க
  • மூளையின் செயல்திறன் அதிகரித்தல்
  • சமூதாய அந்தஸ்து
  • உடல் களைப்பை போக்க
  • கலவியில் உச்சக்கட்டம் வரை ஈடுபட
ஆகியவை பெரும்பாலும் பொதுவானவையாக இருந்தது .
மேற் கூறப்பட்ட காரணங்களுக்காக புகைப்பது என்பது மூடத்தனமாகும் ஏன்  என்றால் ?
புகைக்காதவர் கூட மேற்கூறப்பட்ட விடயங்களில் அதி வெற்றி  பெற்றவர்கள் ஆகவே புகைத்தலை கைவிட்டல் நன்று.

ஆனால்,
  • அரசாங்கம் ஏன் புகைத்தலை முற்றுமுழுதாக தடைசெய்யவில்லை?
  • புகைத்தலால் ஏற்படும் விளைவுகளை மாத்திரம் விளம்பரப்படுத்துகிறார்கள் ஏன்? 
 காரணம் புகைத்தல் கூட ஒரு விதத்தில் சில நோய்களுக்கு மருந்தாகிறது.

 புகையிலையினால் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட், சுருட்டு, பீடி, சிம்லி போன்றவற்றால் புகை பிடிக்கின்றனர்.

புகையிலையில் நிகோடின் என்ற இரசாயணம் உள்ளது .இதுவே புகைத்தலுக்கு அடிமைப்படுத்தும் காரணியாகும், எப்படி எனில்?

நுரையீரலுக்குச் செல்லும் நிகோடின் ஆனது 8 வினாடிக்குள்  நரம்பு மண்டலத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருந்து ஓர் ரம்மியமான அல்லது அருமையான மனநிலைக்கு கொண்டுசெல்கிறது,

 நிகோடினின் அளவு குறையும் போதும்  மேற்படி மாற்றம் அடைந்த மனநிலையை தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவும் இயல்பாகவே இன்னுமொரு தரம் புகைத்தால் என்ன?  என எண்ணி புகைத்தலை தொடர்கிறார்கள்.

புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள்

  1. தோல் சுருக்கங்களினால் வயதிப தோற்றம்.
  2. உதடுகளில் மாற்றம்.
  3. பற்சிதைவு
  4. விரல்களுக்கிடையில் கறைபடிதல்.
  5. தலை முடி கொட்டுதல்.
  6. கண்படலம் (cataract).
  7. தடிப்புத் தோல் அழற்சி அல்லது உளவழித் தோலழற்சி (Psoriasis).
  8. கண்ணிமைகள் குறுகுதல் 
  9. எலும்புகள்  எளிதில் உடையக்கூடியதாகவிருத்தல் (Brittle Bones)
  10. இருதய நோய்கள் .
  11. உடற்பயிற்சி விளையாட்டுக்களில் ஆர்வம் இன்மை.
  12. பிறப்புறுப்புக்களில் தாக்கம் (வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியம்) தாய்மார்கள் புகைத்தல் அல்லது மறைமுகமாக புகைத்தல் (Indirect smoke).
  13. மாதவிடாய் சக்கரத்தில் மாற்றம்.
  14. வாய்,தொண்டை,நுரையீரல் புற்று நோய்.
  15. அதிக இரத்த அழுத்தம்.

 புகைத்தலால் ஏற்படும் நன்மைகள்

  1. முழங்கால் வாத நோய்த்தாக்கம் குறைவு.
  2. பார்கின்சன் நோய் வருவதற்கான அபாய நேர்வு குறைவு(Parkinson's disease)
  3. உடற்பருமன் ஆகும் அபாயம் குறைவு (obesity)
  4. மாரடைப்பால் ஏற்படும் மரணத்தின் அபாயத்தன்மை குறைவு.
  5. சில இருதய நோய்க்கு எடுக்கும் மருந்துகளுக்கு ஊக்கியாக இருத்தல்.

 சுயமாக புகைத்தலை எப்படி கைவிடுவது ?

  • எண்ணம்,சிந்தனை என்பன உறுதியான ,தெளிவானவையாக இருத்தல்.
  • புகைத்தலை கைவிடிவேண்டும் என்பதில் உறுதியாக இருத்தல்.
  • உணவு வகைகளில் மாற்றம் செய்தல்.
  • புகைக்கவேண்டும் என்ற ஏக்கம் வரும் தருனங்களில் ஏதாவதோரு வேலையில் மனதை மாற்றுதல்.
  • புகைத்தலை விரும்பாதவரிடம் நட்பு கொள்ளல்.
  • வாய்க்கும் கைக்கும் ஏதோ ஒரு வேலை கொடுத்தல் .
  • காரணங்களை பட்டியல் இட்டு விலக்கல்.
  • நிகோடின் மாற்று மருந்தை புகைத்தல்
  • உடம்பிற்கு மசாஜ் கொடுத்தல்.
  • குடும்ப ஆரோக்கியத்திதை கருத்தில் கொள்ளல்.

புகைத்தல் பொன்மொழிகள்

  • பணம் கொடுத்து பிணமாகாதே
  • வாழ்வை எரிப்பதில் நாட்டமுண்டோ?