Friday, May 29, 2015

மூளையை ஊக்கப்படுத்துவது எப்படி? Boost Brain power

மூளையை ஊக்கப்படுத்த பல வழிமுறைகள் இருந்தாலும்  உணவின் மூலம் ஊக்கப்படுத்தினால்  மூளையின் தொழிற்பாடு,சக்தி என்பன மென் மேலும் பலம் பெறுவது மட்டுமல்லாமல் உடலின் அனைத்து அவயவங்களுக்கும் ஆரோக்கியத்தையும் ,ஊட்டச்சத்தளிப்பதாகவும் உள்ளது.

இம் முறையானது இலகுவானதும் செலவு குறைந்ததுமாகும்.

உணவில் தான் நமது உடல் ஆரோக்கியம் தங்கியுள்ளது என்பதனை திருக்குறளில் மருத்துவம் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார்.

பெரும்பாலானோர் ஓரேமாதிரியான உணவையே அடிக்கடி உண்பதால் ( நாவின் சுவைக்காக ) அவ்வுணவில் உள்ள மூலப்பொருட்களில் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் இருப்பதனால் ஊட்டச்சத்துக்களின் குறைபாடு என்பனவற்றின் தாக்கத்தால் நோய்நொடிகளுக்கு ஆளாவதோடு ஏனைய உறுப்புக்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களின் குறைபாட்டினாலும் அவ்வுறுப்புக்கள்  செயல் இழப்பதற்கும் வாய்ப்புள்ளதால்,
 அன்றாடம் உண்ணும் உணவானது வித்தியாசமானதாகவும் அவசியமான அனைத்து ஊட்டச் சத்ததுக்களும் உடலுக்கு சேரும் விதமாகவும் அமையவேண்டும்.

எமது உடலில் உள்ள உறுப்புக்களை எடுத்துக்கொண்டால் மூளைக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய உறுப்புக்களில் ஒன்றாகும்.

மூளைக்கு தேவையான சத்துகிடைக்காவிடின்  முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் அல்லது மனத்தளர்ச்சியால் ஏற்படும் பைத்தியம் (Dementia or Alzheimer’s disease)  என்பவற்றிற்கு இளம்வயதிலேயே ஆளாகவேண்டி வருவதால் உண்ணும் உணவுகளில் மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் குறையில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உணவுகளும் 

  • மக்னீசியம் (magnesium) - பசளிக்கீரை,வாழைப்பழம்,பூசனிக்கா விதை,கறுத்த சொக்கலேட்,ஷாட்(Chard),யோகட்,கறுப்பு நிறமான பீன்ஸ் விதைகள்,பாதாம் பருப்பு,அத்திப்பழம்(Figs)
  • ஒமேகா 3 அமிலம் - 
    • இவை கூடுதலாக  மீன்வகைகளில் காணப்படும்  மக்கரல்,டூனா,சலமன் 
    • பருப்பு வகைகள் -  வால் நட் (ஆர்குட்),பிஸ்தா,பாதம்
  •  அவுரி நெல்லி  (Black Berry)    இதில்  உள்ள ஊட்டச்சத்தானது மூளையின் நரம்பு மண்டலங்களுக்கிடையேயான தகவல் பரிமாறும் இணைப்பினை பலமடையச்செய்கிறது.
  • க்ரீன் டீ -  இதில் உள்ள ஊட்டச்சத்துக்களானவை நேய்களை விரட்டியடிப்பவையாகும் தன்மையையும் மூளை நரம்புகளுக்கிடையேயான தொடர்பினை ஊக்கிவித்து ஞாபகசக்கிக்கு வழிவகுக்கிறது.


  • நாட்பட்ட நோய்களான இருதய அடைப்பு,நீரழிவு போன்ற நோய் உள்ளவர்கள் உணவுவிடயத்தில் வலு கவனமாக இருப்பார்கள் மறைமுகமாக இவர்களின் உணவானது மூளைக்கு சக்தியளிப்பதாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அவுரி நெல்லி
அவுரி நெல்லி



க்ரீன் டீ
க்ரீன் டீ



Wednesday, May 27, 2015

புற்றுநோயை தடுக்கும் முறைகள் - Cancer prevent method

சில முறைகளால் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை இல்லாமல் பண்ணலாம் எனத் தெளிவாகின்றது இவையாவன

  • உணவு
    1.  சத்துள்ள உணவு வகை ,இரும்புச்சத்து,உயிர்ச்சத்து ஏ(எவை யு) நிறைந்ததாயும்,காய்,கறி, பழம் முதலியன சாப்பிடுதல் ,இரும்புச் சத்துத்துள்ள உணவு வகையானவை: முட்டை மஞ்சட்கரு,இறைச்சி,ஈரல்,பச்சை இலை வகை(கீரை), எள்ளு, குரக்கன், பனங்கட்டி,உயிர்ச்சத்து ஏ பால்,மீன்,மஞ்சல் நிறங்கொண்ட காய்கறி(கரட்,பூசனி),பழம்(பப்பாளி,மாம்பழம்) ஆகியவற்றில் அதிகம் உண்டு.
    2. அதிகளவு கொழுப்பு,புரதம் சாப்பிடுவதை தவிர்த்தல் ஆனால் எம் நாட்டில் இது செல்வந்தருக்கு மட்டுமே பொருந்தும் ஏனெனில் ஏனையோர் குறைந்தளவு புரதம்,கொழுப்பு சேர்ந்த உணவையே நாளாந்தம் சாப்பிடுகிறார்கள்.இவர்கள் உட்கொள்ளும் புரதம் இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும்.
    3. அதிகளவு சூடான உணவு,அதிகளவு சரக்கு கலந்த கறி வகைகள் அதிகளவு உப்பு,உப்பு கலந்த மீன் தவிர்த்தல்
    4. பூஞ்சனம் பிடித்த உணவு வகைகள் முக்கியமாகப் பனங்கிழங்கு,பனம்மா, நிலக்கடலை தவிர்த்தல்
    5. செயற்கையாகத் தயாரித்து அடைத்து விற்கப்படும் உணவுகள் குறைத்தல் அல்லது தவிர்த்தல்.
    6. அதிக இனிப்பு சேர்ந்த பண்டங்கள் தவிர்த்தல்
  • மதுபானம் அருந்துவது ,புகைத்தல்,வெற்றிலை சாப்பிடுதல் முற்றாக ஒழிய வேண்டும்
  •  ஏலுமாயின் தொழிற்சாலைகள் அமைந்த இடங்களில் (Industrial Ares ) குடியிருப்பது தவிர்த்தல்\
  • மருத்துவரின் யோசனை இல்லாமல் தொடர்ந்து மருந்துகள் பாவிப்பது தவிர்த்தல்
  • புற்றுநோயாக மாறக்கூடிய சில நோய்களுக்கு 
  • (உ-ம்: பப்பிலோமா,லியுகோபிளேக்கியா,நீடித்த காலப்புண் ) விரைவில் சிகிச்சை பெறுதல்
  • மேலே குறிப்பிட்ட சில தொழில்கள் புரிபவர்கள் சுகாதார சேவையாளரின் ஆலோசனைப்படி சில நடவடிக்கைகளை கைப்பற்றுதல் அவசியம்.(உ-ம் ) முகமூடி அனிதல்,கையுறை பாவித்தல்,வேலைமுடிந்து குளித்தல்,தயாரிப்பு சாலைகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் பாதார்தங்களை பாவியாமல் அல்லது அவற்றை மாற்றம் செய்து பாவித்தல்,விளைபொருட்கள் கவனமாக அப்புறப்படுத்துதல் சில முறைகளாகும்.கிருமி நாசினி அடிப்போர் காற்று வீசும் பக்கம் சேர்ந்து அடித்தல் கைகழுவுதல்,குளித்தல்.
புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
புற்றுநோய் தோற்றத்தில் ஈடுபடும் காரணிகள்


Sunday, May 24, 2015

கலவியின் நன்மைகள் 10 - Benefit of Sex

இந்த இடுகையானது குடும்பத்தவர்களுக்கு பொருந்தும் இருந்தாலும் 18 வயதுக்கு மேற்பட்டோர் வாசித்து ஞாபகப்படுத்திக் கொண்டீர்களானால் பிற்காலத்தில் உதவியாக இருக்கும்

குற்றமற்ற கலவியில் நாள்தோறும் ஈடுபட்டால் ஆண்,பெண் ஆகிய இருவரினதும் உடம்பில் ஏற்படும் மாற்றமானது நன்மையானதா? அல்லது தீமையானதா?
நாள்தோறும் கலவியில் ஈடுபடுவது சாத்தியமா?
போன்ற கேள்விகளுக்கு தகுந்த முறைப்படி கீழே விளக்கப்பட்டுள்ளது.

கலவி என்பது வாழ்க்கையில் ஒரு அவசியமான பகுதியாகும், உடல் உறவு முறையானது காரணத்துடன் இருக்கலாம் அல்லது திருட்டுத்தனமாகவும் இருக்கலாம் எப்படி இருப்பினும் கலவியில் ஈடுபட்ட பின் ஏற்படும் தடையில்லாத நிம்மதியால் உடம்பு எப்படி நன்மையடைகிறது என்பதைப்பார்ப்போம்.

  1. இரத்த ஓட்டம் சீராக்கப்படுவதனால் இருதயத்தின் ஆரோக்கியம் பேனப்படுகிறது
    • மறைமுகமாக முழு உடம்பிற்கும் உடற்பயிற்சி நடைபெறுவதனால்.
  2. பாலியல் உளவழுத்தம் நிம்மதியடைகிறது.
    •  கட்டி அணைப்பதாலும் முத்தம் கொடுப்பதாலும் இரத்த அழுத்தம் குறைவதனால்
  3. நோய் எதிர்ப்புச்சக்தியை ஊக்குவிக்கிறது.
    • குற்றமற்ற கலவியில் ஈடுபடுகையில் உடம்பில் நோய் எதிர்க்கும் அணுக்கள் தானாகவெ உற்பத்தியாகின்றன (Antibodies)  (தடிமன் மற்றும் தொற்றுக்களிருந்து பாதுகாக்க)
  4. எம்மை அறியாமல் சக்தி எரிக்கப்படுகிறது (Calories Burn).  
    • கிட்டத்தட்ட 30 நிமிடத்திற்கு கலவியில் ஈடுபட்டால் 85 ஜுல் தேவைப்படுகிறது ( முழு உடம்பிற்கும் வேலை கொடுப்பதால்)
  5. கண்ணியம் இருவருக்கும் ஊக்கப்படுத்தப்படுகிறது. (Boots Esteem)
    • கலவியில் ஈடுபடும் நேரத்தைப்பொறுத்து அமையும்  (உ-ம்: நேரம் எடுத்து நிம்மதியாகவும் அழகாகவும் உணர்வு பூர்வமாகவும் கலவியில் ஈடுபட்டால் நிச்சயமாக கண்ணியம் பேனப்படும்).
  6. நெருக்கம் செம்மைப்படுத்தப்படுகிறது.(Improve Intimacy)
    • எமது உடம்பு மண்டலம் காதலை (காமம்) உருவாக்கும் ஹோர்மோன்களின் உற்பத்தியின்  உதவியினால் தெளிவான கலவியில் ஈடுபடுதல்
  7. வேதனை , மனத்துன்பம் என்பன இல்லாமல் போதல்
    • மேற்கூறி விடயங்களிருந்து உடம்பு வலி ,தலைவலி போன்ற வற்றிற்கு மருந்தாகிறது
  8. ஆண்களுக்கு ஏற்படும் சுக்கிரியன் சுரப்பி புற்றுநோய் உருவாகும் அபாயம் குறையும் (Prostate Cancer).
    • சுக்கிலத்தை அடக்கிவைத்திருக்காமல் வெளியேற்றம் செய்வதனால் சுக்கியனில் (Prostate ) தோக்கம் இல்லாமல் போவதால் .
    •  மாதத்திற்கு கிட்டத்தட்ட 21 முறை சுக்கிலத்தை வெளியேற்றுவதால் சுக்கிரியன் சுரப்பி நன்றாக வேலை செய்யும் , கிழவனும் அப்பாவாகலாம் .?
  9. இடுப்புத்தசைகளை நன்றாக வலுப்படுத்தலாம்
    • பாலியல் உணர்ச்சியின் நிமிர்த்தம் இடுப்புத்தசைகளின் உதவியினால் கலவியில் ஈடுபாடு
  10. நிம்மதியான தூக்கம் (நித்திரை) (Enhances sleep)
    • கவனக்குறைவில்லாமல் முறையாக கலவியில் ஈடுபட்டபின் நிம்மதியான் தூக்கம் தானாகவெ வரும்

கலவியின் தீமைகள் 10

  1. சுகாதாரமற்ற கலவி - 
    • தொற்றுநோய்களுக்கு விருந்தளித்தல்.
  2. பாதுகாப்பு அற்ற கலவி முறை -
    •  ஆண் உறை ,பெண் உறை அணியாத திருட்டு கலவி
  3. பணம் வீண்விரயமாதல் -
    •  விபச்சாரிகளிடம் தஞ்சம் அடைதல்
  4. குடும்ப பிரச்சனை -
    • ஓன்றுக்கு மேற்பட்டோரிடம் கலவி வைத்திருத்தல்
  5.  கட்டுப்பாடற்ற கலவி -
    •  வீண் சண்டைகள் , நீதி மன்றம், சிறை
  6. உறுப்புக்களுக்கு  ஓய்வு கொடுக்காமை -
    • புற்று நோய் அபாயம் ,செயலிளப்பு
  7.  ஆர்வம் அற்ற நிலை-
    • எந்நேரமும் கலவி சம்பந்தமான விடயங்களில் கவனம்
  8. சிறார்களின் மன பாதிப்பு, வளர்ச்சி  -
    • மிருகங்களைப் போல் செயல்படல்
  9.  நெருக்கம் ,நம்பிக்கை அற்ற நிலை- 
    • பாலியல் அறிவற்ற கலவி தன்னுடை உணர்வுக்கு முக்கியத்துவம்
  10. செல்வாக்கு மானம் என்பன காற்றில் பறத்தல்-
    • நவீன தொழில்நுட்பதினால் திருட்டு ,காரண கலவியை கள்ளத்தனமாக படம்பிடித்து இணையத்தளங்களில் உலாவிடுதல்
வேறு ஏதேனும் இருப்பின் மற்றவர்களுக்கும் Comments Box  ஊடாக அறியத்தரவும்

Tuesday, May 19, 2015

மதுபானம் அருந்துவது எப்படி?

இது என்ன புதுவிடயம்? எல்லோருக்கும் தெரிந்தவிடயந்தானே என்று நினைத்துவிடாதீர்கள்.

 உ- ம் :  நாம் உண்ணும் உணவில் கூட சுவை (ருசி),மணம்,பிடித்த கறிகள் ,என்பவற்றை பார்க்கும்போது பசி தானாகவே வரும் அதே நேரம் சாப்பிடும் அளவில் கூட சற்று வித்தியாசம் தெரியும் ஏன்? என்று பார்த்தால் அவ் உணவு சமைக்கப்பட்ட விதமாகும் (அம்மா சமைத்த சாப்பாடு ஞாபகம் வருகிறதா?).

அதே போல் மதுபானத்தையும் அருந்தும் போது சில விஷயங்களை கடைப்பிடித்தால் மதுபானத்தின் உண்மையான சுவையையும் அதன் பலத்தையும் அறியலாம்.

மதுபான வகைகள்

  • வைன் - பழங்களிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பியர் - தானியங்கள்,கிழங்கு வகைள்  இருந்து உற்பத்திசெய்யப்படுகிறது.
  • கள்ளு - தென்னை,பனை,கித்துல் மரங்களின் பூவிலிருந்து இயற்கையாக பெறப்படுகிறது 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான மதுபானங்களை சிறந்த தொழிநுட்பத்தினால் காய்ச்ச வடித்து வித்தியாசமான மதுபான வகைகள் தயாரிக்கப்படுகின்றன அவை

  • வைன் -  பிரண்டி ஆகவும்
  • பியர் - விஸ்கி,வெட்கா, ரம்  ஆகவும்
  • கள்ளு -  சாராயம் ஆகவும் தாயரிக்கப்படுகிறது.
இவை தவிர சில நாடுகளில் பால்,கற்றாழை,ஒரு வகை மர சக்கை ,தேன் ஆகியவற்றிலிருந்தும் மதுபானம் தாயரிக்கப்படுகிறது.

கீழே  ஒரு கிளாஸ் மதுபானம் அருந்தும் சில முறைகளை தருகிறேன் ,உங்களுக்கு பிடித்த முறையை Comments  ஊடாக தாருங்கள்
  • வைன்,பீர்,கள்ளு என்பவற்றிற்கு எந்தவித கலவையும் கலக்கத் தேவையில்லை நேரடியாக குடிக்கலாம்
  • விஸ்கி வகைகள்
    • ஐஸ் துண்டுகள்
    • ஸ்பிரைட், / சோடா
    • தேசிகாய் துண்டு
    • சீனி சிறிதளவு கலந்து அருந்திப்பாருங்கள்
  • பிரண்டிவகைகள்
    •  சீனி சிறிதளவு
    • தேசி சாறு இருதுளி
    • கொககொலா என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
  • ஜின் வகைகள்
    • தோடம் சாறு சிறுதுளி
    • முட்டை வெண் கரு சிறிதளவு
    • தேசிச்சாறு சிறுதுளி என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
  • வெட்கா வகைகள்
    • ஹாவி கிறீம் சிறிதளவு (Heavy cream)
    • அன்னாசிப்பழ யூஸ் சிறிதளவு
    • இளநீர்,வழுக்கல்(Coconut Cream)
    • ஐஸ் துண்டுகள் என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
  • ரம் வகைகள்
    • வனிலா சிறு துளி
    • ஒரேஞ் யூஸ்
    • ஐஸ்கிறீம் சிறிதளவு  என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
மேலே கூறப்பட்டவை விட சிலர் தங்களுக்கென்றே விஷேடமான முறைகளை கையாளுகின்றனர்  எப்படி இருப்பினும் மதுபானம் அருந்துவது ஒரு கலையாகும் அதை அனுபவரீதியாகத்தான் பெறவேண்டும்

Monday, May 18, 2015

மனித கல்லீரல் பாதுகாப்பது எப்படி?

மனித கல்லீரல் ஆனது தன்னைதானே புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றல் உள்ள  ஒரு விசித்திரமான முக்கோண வடிவமுள்ள ,மனித உடலில் உள்ள மிகப் பெரிய உறுப்பாகும். இதன் அளவு ஒரு கால்பந்தளவாகும் (Foot Ball size) ,இது கிட்டத்தட்ட 500 விதமான வேலைகளைச் செய்வதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதில்  இரத்தத்தை சுத்திகரிக்கும் தொழிலானது மிக முக்கியமானதாகும்

ஆகவே எமது கல்லீரலை மிக கவனமாக பாதுகாக்கவேண்டிது எமது கடமையாகும்
.

கல்லீரலுக்கு தீங்குவிளைவிப்பவை

  1. பரசிட்டமோல் மாத்திரை (அதிகளவில் உட்கொள்ளப்பட்டால் உயிராபத்து ஏற்படும் இதில் வேறு  600 வகையாக  மாத்திரைகளும்)
  2. மதுபாணம் (ஈரலின் தொழில்பாட்டை குறைத்தல், கல்லீரலில் கொழுப்பு படிவு,ஈரலின் கலங்களை அழித்தல்)
  3. வைரஸ் கிருமி (Hepatitis A,B and C)
  4. சுகாதாரமற்ற பாலியல் உறவு.
  5. கல்லீரல் புற்றுநோய் 
    1. ஈரலில் உருவானவை 
    2. ஈரலுக்கு பரவியவை (Secondary deposit or metastasis )
  6. பித்தக் கற்கள்
  7. உட்கொள்ளும் உணவிலிருந்து அதிகளவான அயன்களை சேமித்துவைத்தல் (Hemochromatosis)
  8. மஞ்சட்காமாலை
  9. விபத்துக்களினால் பாதிக்கப்படல்
  10. சில நோயை குணமாக்க உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் இலை வகைகள்,இலைச்சாறு

அறிகுறிகள் (ஈரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால்

கல்லீரல் நோய்வாய் பட்டால் எமக்கு உடனடியாக தெரியாது ஏனெனில் ஈரல் நோயானது அமைதியாக இருந்து கொண்டு வளரும் தன்மையுடையது  ஆனால் சில அறிகுறிகள் எமது பழக்கவழக்கங்கள் மூலம் அவதானித்தால் குணப்படுத்தலாம் அவற்றில் சில ,
  • மூட்டுக்களில் வலி
  • பசியின்மை
  • சோர்வான நிலை
  •  நீரழிவு 
  • பாலியலில் நாட்டம் குறைதல்
  • இதயம் வலித்தல்
  • கொலஸ்ரோலின் அளவு அதிகரித்தல்
  • தோல் கடி
  • வயிறு வீக்கம்
  • சிறுநீரின் நிறத்தில் மாற்றம்
  • கண்,தோல் மஞ்சலாதல்

கல்லீரலின் தொழில்கள்

  • உட்கொள்ளப்படும் மதுபாணம்,மருந்துகள் ஆகியவற்றின் விசத்தன்மையை அகற்றுதல்
  • விட்டமீன்களை அயன் வடிவத்திற்கு மாற்றி உடம்பில் சேமிக்கிறது
  • சீனியை குளுக்கோசாக மாற்றி உடலில் சேமிக்கிறது
  • இறந்த செங்குருதி கலங்களை அழித்தல்
  • கொழுப்பை உருவாக்கல்
  • இரத்தத்திலுள்ள கழிவுகளை சுத்திகரித்தல்   பல வேலைகளை செய்கின்றது.

கல்லீரலின் ஆரோக்கிய நிலையை அறியும் வழிகள்

  • இரத்தப் பரிசோதனைகள் (Blood Test)
  • கழி ஒலி மூலம் (USS)
  • ஈரலின் உடல் திசு ஆய்வு .(biopsy)
  • நியூக்கிளியர் ஸ்கான்
ஆகவே எமது ஈரல் பாதுகாக்கவேண்டியது எமது கடமையே

கல்லீரலை பாதுகாக்கும் வழிகள்

  1. உட்கொள்ளும் உணவில் மாற்றம்
  2. பாதுகாப்பான பாலியலில் 
  3. தரமான மதுவகைகளை அளவோடு எடுத்தல்
  4. அன்றாடம் உடற்பயிற்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தல்
  5. ஈரல் சம்பந்தமான மேலதீக விபரங்களை வைத்தியர் மூலமே இணையம் மூலமே அறிதல்
  6. உட்கொள்ளும் மாத்திரையின் பக்கவிளைவுகளை அறிந்திருத்தல்
  7. புற்றுநோய் உடம்பில் பரவும் வழிகளை அறிந்திருத்தல்