Wednesday, July 8, 2015

Better Sleep Tips

Here are out of 10 tips for better sleep and waking up easier in the morning.We should consider our sleep as well as the best method because of we spend  half of a day for sleep.

  1. Prepare a good bed
    • Right pillow on your head and sleep type
    • Using new mattress (Medically effect for body)
    • Using clean bed sheets
    • The bed is not worth ,reason for following problems
      • Insomnia,Snoring or other sleep problems
  2. Better eat
    • Avoid eat spicy and junk foods in the night time
    • Going to bed, eat after 30 minutes.
    • Breakfast is the very important thing for better sleep in the night so, don't avoid 
  3. Wake up without disturbance
    •  By alarm clock or smart phone alarm apps 
    •  

Monday, June 29, 2015

15 Forgotten Life Lessons

மறக்கக்கூடாத விடயங்கள்

21ம் நூற்றாண்டில் வாழும் மனிதர்களின் வாழ்கை முறையானது இயந்திரத்தனமானக இருக்கிறது ,நேரத்திற்க்கு முக்கியத்துவமும் கொடுத்து மகிழ்ச்சியையும்,நிம்மதியையும்  ஏன் , வாழ்க்கையில் பல விடயங்களை தெரிந்து கொண்டு இழக்கிறான்.

ஏன்? எப்படி? எனப் பார்க்கையில்,

அங்கே பணம் சம்பாதிக்கும் எண்ணத்திலே குறியாக இருப்பது என்பது தெளிவாகிறது.

இதனை இனி மாற்றமுடியாது. உலகம் போகிற போக்கில் சென்றால்தான் நாமும் வாழலாம் ஆனால் சில மறக்ககூடாத பழக்கவழக்கங்களை பின்பற்றினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ,நிம்மதி ,போன்ற எந்த வெரு விடயத்திலும் செல்வந்தராக முழு நிறைவுடன் வாழலாம்.


  1. முகபாவம்,சைகை,அபிநயம்,சாடை
    • நாம் மற்றவர்களை சந்திக்கும் போது அல்லது கடந்து செல்லும் போது ஒரு புன்சிரிப்பினால் நேர்மறையான எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.
  2. தரம் ,அந்தஸ்து, மதிப்பு என்ற மன உணர்வு.
    • மேற்கூறப்பட்ட மன உணர்வென்பது தன்னைத்தானே இழிவுபடுத்தும் செயலாகும்.இவ் எண்ணம் சிந்தனையால் மற்றவர்களால் வெட்கப்படும் நிலைக்கு ஆளாக நேரிடலாம் ஆகவே சற்று கீழே இறங்கினால் மனதிற்கும் பழகுவருக்கும் இனிமையாகும்
  3. முக்கியமான சந்தர்ப்பத்தில் நழுவுதல்
    • முக்கியமான சந்தர்ப்பத்தில் நழுவாமல் இயலுமான உதவிகளையோ,தீர்வுகளையோ கட்டாயம் செய்யவேண்டும்.
  4. எந்தவெரு பொருளையும் வழங்காது இருத்தல்
    • பொருட்களின் தேவை,தேவையின்மை என்பதைப்பொறுத்தும் ,அப்பொருட்களின் ஆயுள்காலத்தை கருத்தில் கொண்டு மதிப்பறிந்து வழங்கவேண்டும்
  5. எல்லோரும் தம்மை விரும்பமாட்டார்கள்
    • தான் இவ் உலகத்தில் உள்ள அனைவராலும் விரும்பதக்க மனிதன் என்ற சிந்தனை, இறுமாப்பு இல்லாமல் தன்னை வெறுப்பவர்களும் உண்டு என்ற சிந்தனையுடன் இருத்தல்
  6. எந்தவெரு விடயத்திலும் உரிமையுடைவராக இருத்தல்
    • எந்தவெரு விடயத்திலும் உரிமையுடைவராக இருக்க வேண்டுமெனில் உரிமைகளை இழந்தல் மாத்திரமே
  7. எல்லா செயல்களுக்கும் காரணம் உண்டு
    • ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ் வேறான எண்ணம் சிந்தனைகள் இருப்பதினால் சில வேளைகளில் செயல்களை தடைப்படுகின்றன.
  8. சிரிப்பால் அணுகுதல்
    • நீ உலகைப்பார்த்து சிரித்தால் உலகம் உன்னைப்பார்த்து சிரிக்கும்
  9. கீழ்தரமான ,இழிந்த,மட்டமான,பகையெண்ணங் கொண்டு அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்தல்
    • ஒரு விடயத்தை ஞாபகம் வைத்திருக்க வேண்டும்  கீழ்தரமான இஇழிந்த எண்ணங்களுடன் யாரும் பிறப்பதில்லை ஏதோ ஒருவிதத்தில் அவ்வெண்ணங்களை எதிர்த்து சமாளித்து செல்லவேண்டும்
  10. ஆரேக்கியமான உறவுமுறை பேன முடிவெடுப்பதில் நிதானம்
    • ஆரேக்கியமான உறவுமுறை பேண சிந்திக்காமல் அவசரமாக எடுக்கும் முடிவுகளால் பல பாதகங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் ,தவிர்ப்பதானால் முடிவெடுக்கையில் ஒரு படி பின்வாங்கினால் நீண்ட ஆரோக்கியமான உறவு முறையைபேணலாம்.
  11. ஓவ்வொரு வெற்றியையும் பெரிதாக கொண்டாடல்
    • நோக்கம் நிறைவேற்றப்படுகையில் வெற்றி கிடைக்கப்பெறுகிறது. இதனால் புகழின் உச்சத்திற்கு செல்ல அவ்வெற்றியை கொண்டாடுகிறார்கள் எல்லா வெற்றிகளையும் ஒரு நாளில் கொண்டாடினால் ??
    • உதாரணமாக  ,நீங்கள் நோபல் பரிசில் வெற்றிபெற்றால் என்ன செய்வீர்கள்?
  12. எண்ணம் சிந்தனைகளுக்கு ஒத்துப்போகாதவர்களுடன் சிநேகம் வைக்காமை
    • அன்றாட வாழ்க்கையானது நல்ல உணர்வுமிக்கதாக அமையவேண்டும்,இவ் உணர்வை சிதைக்கும் எண்ணங்களுடன் இருப்பவர்களை அன்றாட வாழ்வில் அடையாளம் கண்டு களை அகற்றவேண்டும்.
  13. பன்மடங்கு பலன் தரத்தக்க காரியத்தில் ஈடுபடல்
    • மனக்கிளர்ச்சி , உணர்ச்சி வேகம் ,  உள எழுச்சி  ஆகியவற்றிற்கு முக்கியத்தவம் கொடப்பதானால் சொந்த அறிவை பயன்படுத்தி முடிவெடுத்து செயலில் இறங்கினால் பலன் பன்மடங்டகாகும்.
  14. தான் விரும்பும் துறையுடன் சேர்ந்த அனைத்து துறைகளுடனும் தொடர்பில் இருத்தல்
    • மனிதனுக்க முக்கியமானது தான் விரும்பும் துறை தவிர்ந்த மற்றைய துறைகளில் சிறிதளவெனும் அறிவு இருக்கனும்.இல்லாவிடில் மற்றவர்களால் சூரையாடப்படலாம் உதாரணமாக வியாபாரத்துறையை எடுத்துக் கொண்டால்  நீதி,நிதி,.பிரயாணம்,குற்றவில் போன்ற துறைகளில் அனுபவம் வேண்டும்
  15. மற்றவர்கள் எப்படியான மனத்துடன் பழகுகிறார்கள் என்பதில் அவதானம்
    • சிலர் பழக இனிப்பாக இருப்பார்கள் ஆனால் மனநிலையையானது கீழ்த்தரமானதாக இருக்கும் கண்டுபிடிப்பது கடினம்
சில சில காரணங்களின் நிமர்த்தம் அன்றாடவாழ்வில் கவலையினம்,சோம்பல்,பாவம் பார்த்தல் ,அடிமை எண்ணத்துடன் இருத்தல் போன்ற காரணங்களால் சில விடயங்களை தெரிந்தும் மறந்த விடுகிறோம் அவற்றால் ஏற்படும் அவமானத்திற்கும் முகம் கொடுக்ககூடி சூழ்நிலையை உருவாக்கிக்கொள்கிறோம் மேற்கூறப்பட்ட 15 விடயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டால் நன்று .

புற்றுநோய் தோற்றத்தில் ஈடுபடும் காரணிகள் -Reason for Cancer

இந்நோய் உருவாகுவதற்கு என்ன காரணங்கள் என அறிதல்,இதைத் தடுப்பதற்கு உதவும் கலத்தில் அடிப்படையில் எம்மூலகாரணத்தால் உருவாகின்றது என கண்டுபிடிக்கப்படவில்லையாயினும் இதன் தோற்றத்தில் ஈடுபடும் அல்லது பங்களிக்கும் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவற்றை
  1. பொதுவான காரணிகள் (General Factors) எனவும்.
  2. குறிப்பான காரணிகள் (Specific Factors )எனவும் பிரிக்கலாம்.

பொதுவான காரணிகள்

  1. பரம்பரைக் காரணி (Genetic or Hereditary)
    • புற்றுநோய் பரம்பரையாக தோற்றுவதில்லை என்பது (சில மிக அரியவகைகளை விட) உறுதியாக தெரிந்ததே. மிகஅரிய வகைகளும் மிகவும்  குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.சிலருக்கு புற்றுநோய் உருவாகுவதற்கு பரம்பரையை சேர்ந்ததல்லாத அதிக வாய்ப்புக்கள் (Prides position) இருப்பதால் வேறு காரணிகள் இவர்களில் இலகுவில் புற்றுநோயை தோற்றுவிக்கக் கூடும். புற்றுநோய் குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டால் மற்றோருக்கும் ஏற்படுமென அச்சம் கொள்ளத் தேவையில்லை (ஒரே வகையான புற்றுநோய்க்கு மாத்திரம்)
  2. வைரசுக்கள்(Viruses)
    • இவை மிருகங்களில் புற்றுநோயை உருவாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பின், மனிதரில் மிகச் சில வைரசுக்களே இதற்கு காரணமாக உள்ளன (உ-ம்: கெப்பறைரிஸ் பி வைரஸ் Hepatitis B Virus ,எப்ஸ்ரையின் பார் வைரஸ் Epstein Barr Virus  இவை ஈரலிலும் மூக்குத்தொண்டையிலும் நிணகணுக்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
  3. ஓமோன்கள் (Hormones)
    • இவற்றால் உண்டாகும் சில புற்றுநோய்கள், சில அங்கங்களில் சிலரில் மட்டுமே ஏற்படுகின்றது 
      • உ-ம்: மார்புப் புற்றுநோய் (Breast) புறொஸ்ரேற் (Prostate) கருப்பை புற்றுநோய்(Cervix
  4. அதிகளவு மன நெருக்கம் (Mental Stress)
    • இதனால் ஓமோன்கள் சுரக்கப்பட்டு இவை காரணமாக அமையலாம் ஆனால் இன்னும் இதற்கு போதியளவு ஆதாரங்கள் இல்லை
  5. புற்றுநோயை உருவாக்ககூடிய பதார்த்தங்கள் (Carcinogenic Agents)
    • இவை பெரும்பாலும் பௌதீகம் (Physical) அல்லது இரசாயண (Chemical)பதார்த்தங்கள்.இவை பெரும்பாலும் குறிப்பிட்ட சில தொழில்களைச் செய்பவர்களை பாதிக்கிறது
  • பௌதீக காரணிகள்
காரணி
தொழில்
நோய் எழும் அங்கம்
அயனியாகும் கதிர் வீசல்
Ionizing Radiation
ரேடியம் சுரங்கம்>மருத்துவம்சிகிச்சை> ஆய்வு நிருமாணித்தல்
இயற்கை (சூரியன்)
மருத்துவம்-சிகிச்சை
பைப் புகைத்தல்(pipe)
எலும்பு>தோல்
வெண்கலம்>
மூளை>மார்பு>
பெருஙகுடல்>கேடயச் சுரப்பி  (Thyroid)                     
பிற ஊதாக்கதிர்கள்  
(Ultra violet Radiation )
இயற்கை (சூரியன்)
மருத்துவம்-சிகிச்சை
தோல்
வெப்பக் கதிர்கள்  (Thermal)
பைப் புகைத்தல்  (Pipe)
உதடு >வாய்



இரசாயனக் காரணிகள்


புகைக்கரி>கரித் தார்>தாது எண்ணை
சுரங்கம்
நுரையீரல்>தோல்
அறேமற்றிக் அமின்ஸ் 
(Aromatic Amine)
சாயம் தொகுப்பு
சிறு நீர்ப்பை
நப்தலமின்ஸ்
(Naphtali Mines)
ரப்பர் கயிறு
சிறு நீர்ப்பை
வெப்பத்தார்>
அஸ்பெஸ்ரோஸ்(Asbestos)
குறேம் உலோகத்தாது
 (Chrome Ore)
நிக்கல் உலோகத்தாது 
 (Nickel Ore)
சுரங்கம்
நுரையீரல்
மரத்தூசி>ஐசோபுரோபிலீன் (Iso propylene)
நிக்கல் உலோகம் தாது
மர வேலை >தோல் பதனிடுதல்>
சுரங்கம்
நாசிக்குடா  
(Nasal Sinuses)
போலிவீனைல் குனோறைட்(PVC)
தாயரித்தல்
ஈரல்
கிருமிநாசினிகள்
துணி தாயரித்தல்
கமம்>தயாரித்தல்
சிறு நீர்ப்பை> நாசிக்குடா>நுரையீரல்
  • பூஞ்சணத்தில் உள்ள அப்ஃளா ரொக்சின் (Aflatoxin) உணவு வகைகளில் (பனம்மா ,பனங் கிழங்கு,நிலக்கடலை)சேர்ந்து ஈரலில் நோய் ஏற்படுத்தும்.
இக்காரணிகள் யாவரையும் பாதிப்பதில்லை நோய் ஏற்படுவது குறிப்பிட்ட காரணியின் பாதிப்புத்தன்மை காரணியின் விசை அல்லது அளவு, உடலைத்தாக்கிய நிலை முதலியவற்றில் தங்கியுள்ளது.
  • நீடித்த காலமாக உடலைப்பாதித்து வரும் நோய்கள்
    • சில சாதாரணமான நோய்களும் நீடித்தகாலமாக உடலைப்பாதிக்கும்போது புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன
      •  உ-ம்: தோலில் ஏற்படும் புண்கள்,சிறு நீரகத்தில் அல்லது பித்தப்பையில் கற்கள்,இரும்புச்சத்து குறைவால் உண்டாகும் இரத்தச்சோகை,மதுவால் உண்டாகும் ஈரல் சுருங்கள் (Cirrhosis) முறையே வாய்,களம்,ஈரல் என்பவற்றில் புற்று நோய்க்கு வழிவகுக்கலாம்
  • சில தீங்கற்ற வளர்ச்சிகள் 
    • உ-ம்: பப்பிலோமா(தோலில் ஏற்படும் தீங்கற்ற வளர்ச்சி), வாயில்,ஆண் உடம்பில் ஏற்படும் வெண் தடிப்பு (Leukemia),சில காலத்தில் தீயவளர்ச்சியாக மாறலாம்.
  • குறிப்பான காரணிகள்
    • உணவில் உயிர்ச்சத்து ஏ,இரும்புச்சத்து என்பனவற்றின் பற்றாக்குறைவு- வாய்,களம்,இரப்பை என்பவற்றில் புற்றுநோய் தோன்றும் வீதத்தை அதிகரிக்கலாம்
    • அதிகளவில் கொழுப்புச்சத்தையும் (பிரதானமாக விலங்கு கொழுப்பு) அதிகளவு புரதத்தையும் உட்கொள்வதால் ,பெருங்குடல்,கருப்பை ,மார்பு,சிறு நீரகம் என்வற்றில் புற்றுநோய் வீதம்அதிகரிக்கின்றது.ஆனால் எமது நாட்டில் செல்வந்தரைத் தவிர ஏனையோருக்கு இது காரணமல்ல
    • நார்த்தன்மை குறைந்த உணவு பெருங்குடலில் நோயை ஏற்படுத்தலாம்.இதுவும் எம்நாட்டில் அரிதாகவே காரணமாகும்.
    • அதிக காப்பி அருந்துவது அதுவும் புகைத்தலுடன் சேர்ந்தால் சதையி,சிறுநீரகம் ஆகியவற்றில் புற்றுநோயை உண்டாக்கலாம்
    • பூஞ்சணம் பிடித்த பனம் கிழங்கு, பனம் மா , நிலக்கடலை தொடர்ந்து பாவித்தால் ஈரல் புற்றுநோய் ஏற்படும்
    • அதிகளவில் உப்பை கொண்ட மீன் சாப்பிடுதல் களத்தில் புற்றுநோயை ஏற்படுத்தலாம்
    • செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கு சேர்க்கப்பட்ட சில பதார்த்தங்கள்- ஈரல்,இரப்பை,சிறுநீரகம் என்பவற்றில் புற்றுநோய் வீதத்தை அதிகரிக்கலாம்
    • மிகவும் சூடான உணவு உட்கொள்வதால் வாய்க் குழியிலும் களத்திலும் புற்றுநோய் வாய்ப்பு அதிகரிக்கலாம்
    • கறிகளுக்கு சேர்க்கப்படும் சரக்குகள் அதிகவாயின் வாய்க்குழி,களம்,இரப்பை ஆகியவற்றின் புற்றுநோய் தோன்றும் வீதத்தை அதிகரிக்கலாம்
  • புகைத்தல்
    • புகைத்தல்-புகையிலுள்ள நிக்கொட்டின் எனும் பதார்த்தம்,புகையிலை எரியும்பொழுது உண்டாகும் வேறு பதார்த்தங்களும் நுரையீரலிலும் வேறு அங்கங்களிலும் புற்றுநோயை உண்டாக்கலாம்.பாதிக்கும் தாக்கச் சந்தர்ப்பம் ஒருவர் புகைக்கும் அளவு , நிக்கொட்டின் அளவு,புகைத்தலுடன் மதுபாணம் பாவித்தல்  என்பவற்றில் தங்கியுள்ளது
  • மதுபாணம்
    • பெரும்பாலும் வாய்க்குழி,களம்,ஈரல்,சிறுநீர்ப்பை என்பவற்றில் காரணியாகலாம்.புகைத்தலும் சேர்ந்தால் தாக்கச் சந்தர்ப்பம் அதிகரிக்கும்
  • வெற்றிலை சாப்பிடுதல்
    • வாய்க்குழியில் புற்றுநோய் ஏற்படலாம் ,வெற்றிலையுடன் சேர்க்கும் புகையிலையே முக்கிய காரணமாகும்.சக்கையை பலநேரம் வாய்குழியில் வைத்திருப்பதும் காரணமாகும்.சக்கையை,சாறை விழுங்குவதாலும் களத்திலும், இரப்பையிலும் புற்றுநோய் ஏற்படலாம்.எம் நாட்டில் ,வாய்க்குழி,களம்,இரப்பை புற்றுநோய் மிக மிக அதிகம்.எனவே இவ்வழக்கம் முற்றாக நிற்க வேண்டும்.நிற்பாட்ட முடியாதோர் மிக குறைந்த அளவில் புகையிலை சேர்க்காமல் பலநேரம் வாயக்குழியில் வைக்காமல் சாப்பிடவேண்டும் சக்கையை சாறை விழுங்கப்படாது
  • முன் கூறிய பொது காரணங்களின் அமைப்பில் தொழில்,சுற்றாடல் சம்பந்தப்பட்ட காரணிகள்.
  • சில மருந்துகள்
    • மிகமிக சில மருந்துகள் தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பம் உண்டாகின்றது

Sunday, June 21, 2015

கல்லீரலை ஊறு செய்யும் பழக்கவழக்கம் Liver damaging habits

நல்ல ஓய்வும் 
நல்ல நித்திரையும்  (தூக்கம்)

கல்லீரலையும் மற்றை உறுப்புக்களை பாதுகாப்பது ஓர் உன்னத பழக்கவழக்கமாகும் .

ஆனால் உங்களால் நன்றாக தூங்க முடியவில்லை ,மன உலைச்சல் என்பன இருந்தால் உங்கள் உடம்பில் ஏதோ வெரு தேவையில்லாத நச்சுப் பொருள் உடம்பினுல் ஊடுருவி அது ஆட்டிப்படைக்கிறது என்பதை  தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

கல்லீரல்
கல்லீரல்  (Liver)

கல்லீரலை பாதிக்கும் நமது அன்றாட பழக்கவழக்கங்கள்

  1. இரவில் அதிக நேரம் கண்விழித்திருத்தல்,
  2. மதியம் வரைக்கும் தூங்குதல் .
  3. காலையில் எழுந்தவுடன் சிறுநீர் கழிக்காமை.
  4. கட்டுப்பாடில்லாமல் அதிகம் சாப்பிடுதல்.
  5. காலைச்சாப்பாட்டை தவிர்த்தல்.
  6. தேவையில்லாமல் அதிக மருந்து மாத்திரைகளை பாவித்தல்.
  7. பக்கற்றில் அடைத்த உணவு,செயற்கை சுவையூட்டப்பட்ட உணவு வகைகள், ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளல்.
  8. உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் செய்யும் சமையல் எண்ணெய்களை  உபயோகித்தல் , தேங்காய் எண்ணெய்,ஒலிவ் எண்ணெய்    போன்ற வற்றை தவிர்த்தல்.
  9. அதிக மது பாவனை,புகை பழக்கம்
  10. பொரித்த உணவுகளை களஞ்சியப்படுத்தி உண்பது.
  11. சில காய் கறிகளை பச்சையாகவே  உண்பது.
ஏன்?  இதை எல்லாம் சொல்லுகிறீர்கள், இது சாதாரண விடயம் தானே  என்று நினைத்தீர்கள் என்றால்,?
விளக்கம் அறிய  தொடர்ந்து வாசியுங்கள்.

இயற்கையாக கிடைக்கபெற்ற உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தில் என்னென்ன வேலையை எப்ப ஆரம்பிக்கனும் எப்ப முடிக்கனும் என்ற ஒரு நேரசூசி உள்ளது இதனை எவராலும் மாற்ற முடியாது .

எப்படி எனில்,  

உதாரணமாக  படுக்கைக்கு போக முன் காலையில் குறித்த நேரத்திற்கு எழும்பவேண்டும் என்று நினைத்து தூங்கினால் காலையில் கடிகாரத்தின் அலாரம் அடிக்கமுன் எழுந்துவிடுவோம் ஏப்படி? சாத்தியம் என்று நினைத்ததுண்டா ?

சில முக்கிய விளக்கம் கீழே

உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தின் நேரத்தின் பிரகாரம் 
  1. இரவு 9-11 மணிக்கிடையில் நடப்பவை,
    1. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றும் தொழிற்பாடு நடைபெறும் நேரமாகும் இவ் நேர இடைவெளியில் 
      • செய்யவேண்டியவை
        1. ஓய்வெடுத்தல்
        2. மனதுக்கு இனிமையான இசை,பாட்டு என்பவற்றைக் கேட்டல்
      • செய்யக் கூடாதவை
        1. வீடு கூட்டுதல்
        2. சமையல் பாத்திரங்கள் கழுவுதல்
        3. பிள்ளைகளின் வீட்டு வேலைகளை கவனித்தல்
  2. இரவு 11- 1மணிக்கிடையில் நடப்பவை,
    1. கல்லீரலின் வேலை நடைபெறும் நேரமாகும் இவ் நேர இடை வெளியில் 
      • செய்யவேண்டியவை
        1. நல்ல தூக்கம் 
        2. காற்றோட்டம் உள்ள இடமாக்குதல்
      • செய்யக் கூடாதவை
        1. விழித்திருத்தல்
        2. உடலை வருத்தும் வேலையில் ஈடுபடல்.
  3. விடியற்காலை  1-3 மணிக்கிடையில் நடப்பவை
    1. பித்தப்பையின் தொழிற்பாடு நடைபெறும் நேரமாகும் , இவ்வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருப்போம்
  4. விடியற்காலை  3-5 மணிக்கிடையில் நடப்பவை
    1. நுரையீரல் சுத்திகரிப்பு தொழில் நடைபெறும் நேரமாகும் இந் நேர இடைவெளியில் இருமல் ,சளி ,தும்மல் போன்றவை ஏற்படும் இவற்றுக்கு மருத்துவம் தேவையில்லை சிறிது நேரத்தில் தானாகவே குணமாகும்
  5. விடியற்காலை  5-7 மணிக்கிடையில் நடப்பவை
    1. குடலில் உள்ள கழிவுகளை அகற்றும் வேலை நடைபெறும் நேரமாகும்,கட்டாயம் மலம்கழித்தே ஆகவேண்டும்
  6. காலை  7-9 மணிக்கிடையில் நடப்பவை
    1. சிறுகுடல் ஊட்ச்சத்துக்களை அகத்துறிஞ்சும் வேலைகளை செய்யும் நேரமாகும்,இவ் நேர இடைவெளியில் 
      • செய்யவேண்டியவை
        1. காலை உணவை காலை 7-7:30 மணிக்கிடையில் எடுத்தல்
        2. எண்ணெய் உணவுவகைகளை  பெரும்பாலும் தவிர்த்தல்
      • செய்யக் கூடாதவை
        1. காலை உணவை காலை 6:30 மணிக்கு முதல்  எடுத்தால்  நாளடைவில் குடல் சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகலாம்
நாம் எல்லோருக்கும்  நல்ல பழக்க வழக்கங்களுடன்  உணவுன்று வாழ ஆசைதான் ஆனால் நாம் காலத்துடன் விளையாடுகிறேம், உடம்பானது விளையாட்டுடன் காலத்தை கழிக்கிறது

முக்கியமாக உடம்பிற்கு ஓய்வு கொடுங்கள், நன்றாக நேரத்துடன் தூங்குங்கள்  கல்லீரல் பாதுகாக்கப்படும்

Saturday, June 13, 2015

வாழ்க்கையை ஆனந்தமாக்குவது எப்படி? Happy Life

வாழ்க்கையில் ஆனந்தம் என்பது நாம் நினைத்த காரியங்கள் எவ்வித தங்கு தடையும் இன்றி நிறைவேறினால் ஆனந்தம் தான்.
அக்காரியங்கள் தனக்கும் ,மற்றவர்களுக்கும் நன்மையளிப்பதாக இருந்தால் அவ்வானந்தத்திற்கு அளவே இருக்காது.

ஆனால் ஒரு சிலருக்குத்தான் அவ் ஆனந்த வாழ்க்கை அமைகிறது 
ஏன் ? ,எப்படி ?எதனால்?

வாழ்க்கையில் ஆனந்தம் என்பது பல காரணிகளில் தங்கியுள்ளது அவற்றில் காலம் மிக முக்கியமானதாகும் 

அதாவது நாம்
 நேற்று நினைத்த நாளைய நாள் இன்றாகும்

விளக்கமாக சொல்லப்போனால் நேற்று

எதிர் காலத்தைப்பற்றி  திட்டம் தீட்டுவதில் ஆனந்மாய் இருப்போம் ஆனால் காலமானது நன்றாக திட்டமிட்டு அதன் நடத்தையை காட்டிவிடும்,

எனவே திட்டம் தீட்டுகையில் காலத்தை நன்கு தெளிவாக ஆராய வேண்டும்.

உ-ம்: காலம் அறிதல் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் மிக அழகாக விளக்கியுளார்.

  • ஏன் நாளைய நாள் நம் எண்ணம் போல் இருப்பதில்லை ?

    • இன்றைய நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமை
    • ஆசையினால் முக்கியமானவற்றை மறத்தல் அல்லது இகழுதல்
    • விடயத்தில் போதிய அனுபவம் இன்மை ,ஆலோசனை இன்மை
    • தமக்குரிய பதவி,பணம்,இடம்,உணவு.... போன்றவற்றில் அதி கவனம் தேவை  இரு முறை சிந்தித்து முடிவு எடுக்காமை.
    • ஜோதிடத்தில் தெளிவற்ற நம்பிக்கை.
    • மன இயல் சாத்திரம் உளவியல் ,நடத்தையியல் என்பவற்றில் தேர்ச்சி  அற்ற நிலை.
    • எவ்வித பொறுப்பற்ற நிலை
    தொடரும் .....

Sunday, June 7, 2015

தலாய் லாமாவின் மனிதன் யார்? Who is human ?

அன்மையில் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டகேள்விக்கு ஆனது

 மனிதன் யார்?

விளங்கப்படுத்துவது எப்படி ?

என்று தெரியாமல் இணையத்தில் தேடுகையில் தலாய் லாமா என்ற திபேத் நாட்டு பௌத்த துறவியின் தற்போதைய மனிதன் யார் என்ற கருத்தை உங்களிடம் பகிர்கையில் மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் சொல்லுகிறார் மனிதனைப்போல் ஆச்சரியபடத்தக்கக்கூடி ஓர் விஷேட உயிரினமாகும் ஏனெனில்,

முக்காலம் இருப்பதை நன்கு அறிந்தவன் (இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம்) ஆனால் பணம் என்னும் விடயத்தில்,

தற்போதைய மனிதன் எப்படி உள்ளான் என்பதை சிறு சிந்தனை மூலம் விளக்கம்கொடுத்திருந்தார்.

  • அவன் பணம் சம்பாதிப்பதற்காக
    • ஆரேக்கியம்
    • குடும்பம்
    • அவமானம்,தன்மானம்
    • பொய் சொல்லுதல்
    • சிநேகிதம்
போன்ற வற்றை தியாகம் செய்கிறான்,
தியாகம் செய்தவற்றை மீண்டும் பெற சம்பாதித்த பணத்தை (செல்வம்) தியாகம் செய்கிறான் ( உ-ம் : மருத்துவம்,கடன், குடும்ப ஒற்றுமை .....)

  • நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான் இதனால்  (உ-ம் : கடன்,மாளிகை போன்ற வீடு, வாகணம்  ...)  நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நிம்மதியாக வாழமுடியாமல் தவிக்கிறான் .
  • தனக்கு இறப்பே இல்லை என்ற இறுமாப்புடன் நீதி தவறி வாழ்கிறான் ஆனால் இறுதியில் வாழாமலே சாகிறான்
இதுதான தலாய் லாமாவின் தற்போதை மனிதன் என்பதற்கான அவரின் விளக்கம் முடிந்தால் நீங்களும் உங்களுடைய கருத்தை Comments box ஊடாக இவ்வுலகிற்கு தெரியப்படுத்தவும் .

 மனிதன் யார்?
தலாய் லாமா





Wednesday, June 3, 2015

கல்லீரலில் கொழுப்பு படிவு - Fatty Liver (steatosis)

இதனை கொழுப்புமிகு ஈரல் என்றும் அழைக்கலாம்

எம்மில் நிறையப்போருக்கு கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பற்றியும் அதன் பக்கவிளைவுகள்,எதனால் கொழுப்பு படிகிறது என்ற அலட்சிய அறிவுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக பாசி எப்படி தான் வளரும் இடத்தையும் வளர்வதற்க்கு தேவையானா ஊட்ச்சத்துக்களும் கிடைக்கும் இடத்தையும் தேர்ந்தெடுத்து அது  மெதுவாக வளரும்,
வளர்ந்து வருகையில் எந்தவெரு தொல்லையும் இராது,
 நாம் சறுக்கி (வழுக்கி) விழுந்து கை,கால் என்பவற்றில் காயம் ஏற்பட்ட பின் தான் புத்தி வரும் பாசியை அகற்றவேண்டும் என்று அதுவரைக்கும் அன்றாடம் பாசி தெரிந்தும் தெரியாதுபோல் இருப்போம்.

அதே போலத்தால் கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு படிவானது எந்தவொரு அறிகுறிகளையும் காட்டாது வளர்ந்து கொண்டிருக்கும் நன்றாக படிந்த பின் தான் அதன் குணத்தைக்காட்டும்.

கல்லீரலின் தொழிற்பாடு

  உண்ணும் உணவு,குடிக்கம் குடிவகைகள் என்பவற்றில் உள்ள நச்சுப்பாதார்த்தங்கள் ,கொழுப்பு என்பன நேரடியாக இரத்த ஓட்டத்தில் கலப்பதை பித்த நீருடன் சேர்ந்து ஒரு வடிதட்டாக செயல்பட்டு தடுக்கிறது. இதனால் மற்றைய அவயவங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

கல்லீரலில் கொழுப்பு படிவினால் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள்

  • ஆடிக்கடி வயிறு ஊதுதல் (உப்பிசம்)
  •  பசியின்மை
  •  நிறை குறைதல் (உடல் உழைப்பின்றி ,காரணமின்றி)
  • களைப்புத்தன்மை (சோர்வு)
  •  மருத்துவம் தேவைப்படாத வயிற்று வலி (சாதுவான வலி)
  • உண்ட உணவு செமிக்க நீண்ட நேரம் எடுத்தல்.
  • அடித்தொண்டையில் கசப்பு தன்மையை உணர்தல்.
50- 60 வயதைத்தாண்டினவர்கள் சற்று கவனமாக மேற் கூறிய அறிகுறிகளில் தென்பட்டால் கட்டாயம் வைத்திய ஆலோசனை பெறவேண்டும்.

கல்லீரலில் கொழுப்பு படிவிக்கான மூல காரணங்கள்

இரண்டுவகைகளாகப் பிரிக்கலாம்
  1. மது இல்லாத கல்லீரல் கொமுப்பு படிவு
  2. மதுவினால் கல்லீரல் கொமுப்பு படிவு
மேலும்,
  1. அதிகமாக மது அருந்துதல் (Heavy alcoholism).அல்லது மது அருந்தாவர்களும்
  2. நொறுக்குத் தீனிகள். 
    • குழந்தைகள் அடிக்கடி விரும்பி சாப்பிடுகின்ற நொறுக்குத் தீனிகள்
  3. சில நஞ்சுப்பொருட்கள் உட்கொள்ளல் (Toxins).
    •  சில உணவுகளில் ருசிக்காக சில இரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றவை
    • குளிர்பானங்கள்  
    • பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ்
    • உணவுப் பொருள் கெடாமல் இருக்க பாவிக்கப்படும் சில இரசாயனங்கள்
  4. குறிப்பிட்ட மருந்து வகைகள் (Cretin drugs).
    • Aspirin
    • Steroids
    • Tamoxifen
    • Tetracycline
  5. இரத்தத்தில் கொழுப்பின் அளவு பரிந்துரைக்கப்பட்டதை விட அதிகமாக இருத்தல் (High blood Cholesterol).
  6. இரண்டாம் வகையான நீரழிவு (Type 2 Diabetic ).
  7. ஓரே இடத்தில் அதிகநேரமாக இருத்தல் (Obesity).
  8. வைரஸ்.(ஹெப்பாடிட்டீஸ்)
  9. கர்ப்பகாலம் (pregnancy ).
  10. ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition)
  11. அனுசேபப் பிணி (Metabolic Syndrome)
    • ஜீரண மண்டல பாதிப்பு

எப்படி கல்லீரல் கொழுப்பை கண்டுபிடிப்பது?

  1.  வைத்திய நிபுணர்  - பார்த்து , கேட்டு ,தொட்டுணர்ந்து நோய் நாடல் .(Physical examination)
  2. இரத்தப் பரிசோதனை(Blood Test)
  3. கழி ஒலி பரிசோதனை(Ultra sound)
  4. கல்லீரல் இழைய சோதனை(Liver Biopsy)

கல்லீரல் கொழுப்புக்கான மருத்துவமும் தடுக்கும் முறைகளும்

  1. மதுபானத்தை கட்டுப்படுத்துதல் / தவிர்த்தல்.
    • எலுமிச்சை சாறு சேர்த்த நீரை பருகுதல்
    • திராட்சை ஜுஸ், கேரட் ஜுஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடு
  2. இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கட்டு படுத்தல்
    • வீட்டில் தயாரித்த உணவு
    • பூண்டை தினசரி சமையலில் சேர்ப்பது
    • உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும்
    • அசைவ உணவுகளை தவிர்ப்பது நன்று
    • உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  3. உடல் நிறையை குறைத்தல்
    • ஏரேபிக் நடனம்(Aerobic Dance)
    •  ஓரளவு வேகமான நடை
  4. இரத்தத்தில் சக்கரையின் அளவை பராமரித்தல்
    • இளநீர், கரும்புச்சாறு அருந்துதல்.
    • பகுத்தறிந்து உண்ணல்
கல்லீரல் கொழுப்பானது ஆபத்து  என்றாலும், படிப்படியாக குறைக்கலாம் எப்படி என்றால் ?

உடல் பருமனைக் குறைக்கும் போது (உடற்பயிற்ச்சி,உணவு வகைகள்) ,

கல்லீரலில் உள்ள கொழுப்பானது தானாகவே கரைந்துவிடும்.

அதாவது கலோரி கட்டுப்பாடு காரணமாக கல்லீரலில் உள்ள  கொழுப்பு தானாகவே குறையும்.எனவே இயற்கை முறையினால் உடல் பருமனைத் குறைத்தால் வெற்றி தான்

Monday, June 1, 2015

புகைத்தலை எப்படி கைவிடுவது? How to give up smoking in Tamil

புகைத்தலை செய்வது மனிதன் மாத்திரம்,
ஏன் புகைக்கிறான்?
புகைத்தல் நன்மையா? , தீமையா?

ஒன்றை நினைவில் வைத்திருக்கவேண்டும் ஆறறிவுள்ள மனிதன் புகைத்தலை செய்கிறான் என்றால் அதில் ஏதோ ஒரு ஒன்று இருக்கவேண்டும்?
சரி இதில் என்ன இருக்கிறது என்று ஆராய புகை குடிப்பவதுகளிடம் விசாரித்தால் அவர் சொல்லும் காரணம்
  • நிம்மதியான சூழ்நிலை அனுபவிக்க
  • காலைக் கடன்களை கழிக்க
  • மன இறுக்கத்தை தளர்வுசெய்ய
  • போதையை அதிகரிக்க
  • மூளையின் செயல்திறன் அதிகரித்தல்
  • சமூதாய அந்தஸ்து
  • உடல் களைப்பை போக்க
  • கலவியில் உச்சக்கட்டம் வரை ஈடுபட
ஆகியவை பெரும்பாலும் பொதுவானவையாக இருந்தது .
மேற் கூறப்பட்ட காரணங்களுக்காக புகைப்பது என்பது மூடத்தனமாகும் ஏன்  என்றால் ?
புகைக்காதவர் கூட மேற்கூறப்பட்ட விடயங்களில் அதி வெற்றி  பெற்றவர்கள் ஆகவே புகைத்தலை கைவிட்டல் நன்று.

ஆனால்,
  • அரசாங்கம் ஏன் புகைத்தலை முற்றுமுழுதாக தடைசெய்யவில்லை?
  • புகைத்தலால் ஏற்படும் விளைவுகளை மாத்திரம் விளம்பரப்படுத்துகிறார்கள் ஏன்? 
 காரணம் புகைத்தல் கூட ஒரு விதத்தில் சில நோய்களுக்கு மருந்தாகிறது.

 புகையிலையினால் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட், சுருட்டு, பீடி, சிம்லி போன்றவற்றால் புகை பிடிக்கின்றனர்.

புகையிலையில் நிகோடின் என்ற இரசாயணம் உள்ளது .இதுவே புகைத்தலுக்கு அடிமைப்படுத்தும் காரணியாகும், எப்படி எனில்?

நுரையீரலுக்குச் செல்லும் நிகோடின் ஆனது 8 வினாடிக்குள்  நரம்பு மண்டலத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருந்து ஓர் ரம்மியமான அல்லது அருமையான மனநிலைக்கு கொண்டுசெல்கிறது,

 நிகோடினின் அளவு குறையும் போதும்  மேற்படி மாற்றம் அடைந்த மனநிலையை தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவும் இயல்பாகவே இன்னுமொரு தரம் புகைத்தால் என்ன?  என எண்ணி புகைத்தலை தொடர்கிறார்கள்.

புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள்

  1. தோல் சுருக்கங்களினால் வயதிப தோற்றம்.
  2. உதடுகளில் மாற்றம்.
  3. பற்சிதைவு
  4. விரல்களுக்கிடையில் கறைபடிதல்.
  5. தலை முடி கொட்டுதல்.
  6. கண்படலம் (cataract).
  7. தடிப்புத் தோல் அழற்சி அல்லது உளவழித் தோலழற்சி (Psoriasis).
  8. கண்ணிமைகள் குறுகுதல் 
  9. எலும்புகள்  எளிதில் உடையக்கூடியதாகவிருத்தல் (Brittle Bones)
  10. இருதய நோய்கள் .
  11. உடற்பயிற்சி விளையாட்டுக்களில் ஆர்வம் இன்மை.
  12. பிறப்புறுப்புக்களில் தாக்கம் (வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியம்) தாய்மார்கள் புகைத்தல் அல்லது மறைமுகமாக புகைத்தல் (Indirect smoke).
  13. மாதவிடாய் சக்கரத்தில் மாற்றம்.
  14. வாய்,தொண்டை,நுரையீரல் புற்று நோய்.
  15. அதிக இரத்த அழுத்தம்.

 புகைத்தலால் ஏற்படும் நன்மைகள்

  1. முழங்கால் வாத நோய்த்தாக்கம் குறைவு.
  2. பார்கின்சன் நோய் வருவதற்கான அபாய நேர்வு குறைவு(Parkinson's disease)
  3. உடற்பருமன் ஆகும் அபாயம் குறைவு (obesity)
  4. மாரடைப்பால் ஏற்படும் மரணத்தின் அபாயத்தன்மை குறைவு.
  5. சில இருதய நோய்க்கு எடுக்கும் மருந்துகளுக்கு ஊக்கியாக இருத்தல்.

 சுயமாக புகைத்தலை எப்படி கைவிடுவது ?

  • எண்ணம்,சிந்தனை என்பன உறுதியான ,தெளிவானவையாக இருத்தல்.
  • புகைத்தலை கைவிடிவேண்டும் என்பதில் உறுதியாக இருத்தல்.
  • உணவு வகைகளில் மாற்றம் செய்தல்.
  • புகைக்கவேண்டும் என்ற ஏக்கம் வரும் தருனங்களில் ஏதாவதோரு வேலையில் மனதை மாற்றுதல்.
  • புகைத்தலை விரும்பாதவரிடம் நட்பு கொள்ளல்.
  • வாய்க்கும் கைக்கும் ஏதோ ஒரு வேலை கொடுத்தல் .
  • காரணங்களை பட்டியல் இட்டு விலக்கல்.
  • நிகோடின் மாற்று மருந்தை புகைத்தல்
  • உடம்பிற்கு மசாஜ் கொடுத்தல்.
  • குடும்ப ஆரோக்கியத்திதை கருத்தில் கொள்ளல்.

புகைத்தல் பொன்மொழிகள்

  • பணம் கொடுத்து பிணமாகாதே
  • வாழ்வை எரிப்பதில் நாட்டமுண்டோ?

Friday, May 29, 2015

மூளையை ஊக்கப்படுத்துவது எப்படி? Boost Brain power

மூளையை ஊக்கப்படுத்த பல வழிமுறைகள் இருந்தாலும்  உணவின் மூலம் ஊக்கப்படுத்தினால்  மூளையின் தொழிற்பாடு,சக்தி என்பன மென் மேலும் பலம் பெறுவது மட்டுமல்லாமல் உடலின் அனைத்து அவயவங்களுக்கும் ஆரோக்கியத்தையும் ,ஊட்டச்சத்தளிப்பதாகவும் உள்ளது.

இம் முறையானது இலகுவானதும் செலவு குறைந்ததுமாகும்.

உணவில் தான் நமது உடல் ஆரோக்கியம் தங்கியுள்ளது என்பதனை திருக்குறளில் மருத்துவம் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார்.

பெரும்பாலானோர் ஓரேமாதிரியான உணவையே அடிக்கடி உண்பதால் ( நாவின் சுவைக்காக ) அவ்வுணவில் உள்ள மூலப்பொருட்களில் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் இருப்பதனால் ஊட்டச்சத்துக்களின் குறைபாடு என்பனவற்றின் தாக்கத்தால் நோய்நொடிகளுக்கு ஆளாவதோடு ஏனைய உறுப்புக்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களின் குறைபாட்டினாலும் அவ்வுறுப்புக்கள்  செயல் இழப்பதற்கும் வாய்ப்புள்ளதால்,
 அன்றாடம் உண்ணும் உணவானது வித்தியாசமானதாகவும் அவசியமான அனைத்து ஊட்டச் சத்ததுக்களும் உடலுக்கு சேரும் விதமாகவும் அமையவேண்டும்.

எமது உடலில் உள்ள உறுப்புக்களை எடுத்துக்கொண்டால் மூளைக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய உறுப்புக்களில் ஒன்றாகும்.

மூளைக்கு தேவையான சத்துகிடைக்காவிடின்  முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் அல்லது மனத்தளர்ச்சியால் ஏற்படும் பைத்தியம் (Dementia or Alzheimer’s disease)  என்பவற்றிற்கு இளம்வயதிலேயே ஆளாகவேண்டி வருவதால் உண்ணும் உணவுகளில் மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் குறையில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உணவுகளும் 

  • மக்னீசியம் (magnesium) - பசளிக்கீரை,வாழைப்பழம்,பூசனிக்கா விதை,கறுத்த சொக்கலேட்,ஷாட்(Chard),யோகட்,கறுப்பு நிறமான பீன்ஸ் விதைகள்,பாதாம் பருப்பு,அத்திப்பழம்(Figs)
  • ஒமேகா 3 அமிலம் - 
    • இவை கூடுதலாக  மீன்வகைகளில் காணப்படும்  மக்கரல்,டூனா,சலமன் 
    • பருப்பு வகைகள் -  வால் நட் (ஆர்குட்),பிஸ்தா,பாதம்
  •  அவுரி நெல்லி  (Black Berry)    இதில்  உள்ள ஊட்டச்சத்தானது மூளையின் நரம்பு மண்டலங்களுக்கிடையேயான தகவல் பரிமாறும் இணைப்பினை பலமடையச்செய்கிறது.
  • க்ரீன் டீ -  இதில் உள்ள ஊட்டச்சத்துக்களானவை நேய்களை விரட்டியடிப்பவையாகும் தன்மையையும் மூளை நரம்புகளுக்கிடையேயான தொடர்பினை ஊக்கிவித்து ஞாபகசக்கிக்கு வழிவகுக்கிறது.


  • நாட்பட்ட நோய்களான இருதய அடைப்பு,நீரழிவு போன்ற நோய் உள்ளவர்கள் உணவுவிடயத்தில் வலு கவனமாக இருப்பார்கள் மறைமுகமாக இவர்களின் உணவானது மூளைக்கு சக்தியளிப்பதாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அவுரி நெல்லி
அவுரி நெல்லி



க்ரீன் டீ
க்ரீன் டீ



Wednesday, May 27, 2015

புற்றுநோயை தடுக்கும் முறைகள் - Cancer prevent method

சில முறைகளால் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை இல்லாமல் பண்ணலாம் எனத் தெளிவாகின்றது இவையாவன

  • உணவு
    1.  சத்துள்ள உணவு வகை ,இரும்புச்சத்து,உயிர்ச்சத்து ஏ(எவை யு) நிறைந்ததாயும்,காய்,கறி, பழம் முதலியன சாப்பிடுதல் ,இரும்புச் சத்துத்துள்ள உணவு வகையானவை: முட்டை மஞ்சட்கரு,இறைச்சி,ஈரல்,பச்சை இலை வகை(கீரை), எள்ளு, குரக்கன், பனங்கட்டி,உயிர்ச்சத்து ஏ பால்,மீன்,மஞ்சல் நிறங்கொண்ட காய்கறி(கரட்,பூசனி),பழம்(பப்பாளி,மாம்பழம்) ஆகியவற்றில் அதிகம் உண்டு.
    2. அதிகளவு கொழுப்பு,புரதம் சாப்பிடுவதை தவிர்த்தல் ஆனால் எம் நாட்டில் இது செல்வந்தருக்கு மட்டுமே பொருந்தும் ஏனெனில் ஏனையோர் குறைந்தளவு புரதம்,கொழுப்பு சேர்ந்த உணவையே நாளாந்தம் சாப்பிடுகிறார்கள்.இவர்கள் உட்கொள்ளும் புரதம் இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும்.
    3. அதிகளவு சூடான உணவு,அதிகளவு சரக்கு கலந்த கறி வகைகள் அதிகளவு உப்பு,உப்பு கலந்த மீன் தவிர்த்தல்
    4. பூஞ்சனம் பிடித்த உணவு வகைகள் முக்கியமாகப் பனங்கிழங்கு,பனம்மா, நிலக்கடலை தவிர்த்தல்
    5. செயற்கையாகத் தயாரித்து அடைத்து விற்கப்படும் உணவுகள் குறைத்தல் அல்லது தவிர்த்தல்.
    6. அதிக இனிப்பு சேர்ந்த பண்டங்கள் தவிர்த்தல்
  • மதுபானம் அருந்துவது ,புகைத்தல்,வெற்றிலை சாப்பிடுதல் முற்றாக ஒழிய வேண்டும்
  •  ஏலுமாயின் தொழிற்சாலைகள் அமைந்த இடங்களில் (Industrial Ares ) குடியிருப்பது தவிர்த்தல்\
  • மருத்துவரின் யோசனை இல்லாமல் தொடர்ந்து மருந்துகள் பாவிப்பது தவிர்த்தல்
  • புற்றுநோயாக மாறக்கூடிய சில நோய்களுக்கு 
  • (உ-ம்: பப்பிலோமா,லியுகோபிளேக்கியா,நீடித்த காலப்புண் ) விரைவில் சிகிச்சை பெறுதல்
  • மேலே குறிப்பிட்ட சில தொழில்கள் புரிபவர்கள் சுகாதார சேவையாளரின் ஆலோசனைப்படி சில நடவடிக்கைகளை கைப்பற்றுதல் அவசியம்.(உ-ம் ) முகமூடி அனிதல்,கையுறை பாவித்தல்,வேலைமுடிந்து குளித்தல்,தயாரிப்பு சாலைகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் பாதார்தங்களை பாவியாமல் அல்லது அவற்றை மாற்றம் செய்து பாவித்தல்,விளைபொருட்கள் கவனமாக அப்புறப்படுத்துதல் சில முறைகளாகும்.கிருமி நாசினி அடிப்போர் காற்று வீசும் பக்கம் சேர்ந்து அடித்தல் கைகழுவுதல்,குளித்தல்.
புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
புற்றுநோய் தோற்றத்தில் ஈடுபடும் காரணிகள்


Sunday, May 24, 2015

கலவியின் நன்மைகள் 10 - Benefit of Sex

இந்த இடுகையானது குடும்பத்தவர்களுக்கு பொருந்தும் இருந்தாலும் 18 வயதுக்கு மேற்பட்டோர் வாசித்து ஞாபகப்படுத்திக் கொண்டீர்களானால் பிற்காலத்தில் உதவியாக இருக்கும்

குற்றமற்ற கலவியில் நாள்தோறும் ஈடுபட்டால் ஆண்,பெண் ஆகிய இருவரினதும் உடம்பில் ஏற்படும் மாற்றமானது நன்மையானதா? அல்லது தீமையானதா?
நாள்தோறும் கலவியில் ஈடுபடுவது சாத்தியமா?
போன்ற கேள்விகளுக்கு தகுந்த முறைப்படி கீழே விளக்கப்பட்டுள்ளது.

கலவி என்பது வாழ்க்கையில் ஒரு அவசியமான பகுதியாகும், உடல் உறவு முறையானது காரணத்துடன் இருக்கலாம் அல்லது திருட்டுத்தனமாகவும் இருக்கலாம் எப்படி இருப்பினும் கலவியில் ஈடுபட்ட பின் ஏற்படும் தடையில்லாத நிம்மதியால் உடம்பு எப்படி நன்மையடைகிறது என்பதைப்பார்ப்போம்.

  1. இரத்த ஓட்டம் சீராக்கப்படுவதனால் இருதயத்தின் ஆரோக்கியம் பேனப்படுகிறது
    • மறைமுகமாக முழு உடம்பிற்கும் உடற்பயிற்சி நடைபெறுவதனால்.
  2. பாலியல் உளவழுத்தம் நிம்மதியடைகிறது.
    •  கட்டி அணைப்பதாலும் முத்தம் கொடுப்பதாலும் இரத்த அழுத்தம் குறைவதனால்
  3. நோய் எதிர்ப்புச்சக்தியை ஊக்குவிக்கிறது.
    • குற்றமற்ற கலவியில் ஈடுபடுகையில் உடம்பில் நோய் எதிர்க்கும் அணுக்கள் தானாகவெ உற்பத்தியாகின்றன (Antibodies)  (தடிமன் மற்றும் தொற்றுக்களிருந்து பாதுகாக்க)
  4. எம்மை அறியாமல் சக்தி எரிக்கப்படுகிறது (Calories Burn).  
    • கிட்டத்தட்ட 30 நிமிடத்திற்கு கலவியில் ஈடுபட்டால் 85 ஜுல் தேவைப்படுகிறது ( முழு உடம்பிற்கும் வேலை கொடுப்பதால்)
  5. கண்ணியம் இருவருக்கும் ஊக்கப்படுத்தப்படுகிறது. (Boots Esteem)
    • கலவியில் ஈடுபடும் நேரத்தைப்பொறுத்து அமையும்  (உ-ம்: நேரம் எடுத்து நிம்மதியாகவும் அழகாகவும் உணர்வு பூர்வமாகவும் கலவியில் ஈடுபட்டால் நிச்சயமாக கண்ணியம் பேனப்படும்).
  6. நெருக்கம் செம்மைப்படுத்தப்படுகிறது.(Improve Intimacy)
    • எமது உடம்பு மண்டலம் காதலை (காமம்) உருவாக்கும் ஹோர்மோன்களின் உற்பத்தியின்  உதவியினால் தெளிவான கலவியில் ஈடுபடுதல்
  7. வேதனை , மனத்துன்பம் என்பன இல்லாமல் போதல்
    • மேற்கூறி விடயங்களிருந்து உடம்பு வலி ,தலைவலி போன்ற வற்றிற்கு மருந்தாகிறது
  8. ஆண்களுக்கு ஏற்படும் சுக்கிரியன் சுரப்பி புற்றுநோய் உருவாகும் அபாயம் குறையும் (Prostate Cancer).
    • சுக்கிலத்தை அடக்கிவைத்திருக்காமல் வெளியேற்றம் செய்வதனால் சுக்கியனில் (Prostate ) தோக்கம் இல்லாமல் போவதால் .
    •  மாதத்திற்கு கிட்டத்தட்ட 21 முறை சுக்கிலத்தை வெளியேற்றுவதால் சுக்கிரியன் சுரப்பி நன்றாக வேலை செய்யும் , கிழவனும் அப்பாவாகலாம் .?
  9. இடுப்புத்தசைகளை நன்றாக வலுப்படுத்தலாம்
    • பாலியல் உணர்ச்சியின் நிமிர்த்தம் இடுப்புத்தசைகளின் உதவியினால் கலவியில் ஈடுபாடு
  10. நிம்மதியான தூக்கம் (நித்திரை) (Enhances sleep)
    • கவனக்குறைவில்லாமல் முறையாக கலவியில் ஈடுபட்டபின் நிம்மதியான் தூக்கம் தானாகவெ வரும்

கலவியின் தீமைகள் 10

  1. சுகாதாரமற்ற கலவி - 
    • தொற்றுநோய்களுக்கு விருந்தளித்தல்.
  2. பாதுகாப்பு அற்ற கலவி முறை -
    •  ஆண் உறை ,பெண் உறை அணியாத திருட்டு கலவி
  3. பணம் வீண்விரயமாதல் -
    •  விபச்சாரிகளிடம் தஞ்சம் அடைதல்
  4. குடும்ப பிரச்சனை -
    • ஓன்றுக்கு மேற்பட்டோரிடம் கலவி வைத்திருத்தல்
  5.  கட்டுப்பாடற்ற கலவி -
    •  வீண் சண்டைகள் , நீதி மன்றம், சிறை
  6. உறுப்புக்களுக்கு  ஓய்வு கொடுக்காமை -
    • புற்று நோய் அபாயம் ,செயலிளப்பு
  7.  ஆர்வம் அற்ற நிலை-
    • எந்நேரமும் கலவி சம்பந்தமான விடயங்களில் கவனம்
  8. சிறார்களின் மன பாதிப்பு, வளர்ச்சி  -
    • மிருகங்களைப் போல் செயல்படல்
  9.  நெருக்கம் ,நம்பிக்கை அற்ற நிலை- 
    • பாலியல் அறிவற்ற கலவி தன்னுடை உணர்வுக்கு முக்கியத்துவம்
  10. செல்வாக்கு மானம் என்பன காற்றில் பறத்தல்-
    • நவீன தொழில்நுட்பதினால் திருட்டு ,காரண கலவியை கள்ளத்தனமாக படம்பிடித்து இணையத்தளங்களில் உலாவிடுதல்
வேறு ஏதேனும் இருப்பின் மற்றவர்களுக்கும் Comments Box  ஊடாக அறியத்தரவும்

Tuesday, May 19, 2015

மதுபானம் அருந்துவது எப்படி?

இது என்ன புதுவிடயம்? எல்லோருக்கும் தெரிந்தவிடயந்தானே என்று நினைத்துவிடாதீர்கள்.

 உ- ம் :  நாம் உண்ணும் உணவில் கூட சுவை (ருசி),மணம்,பிடித்த கறிகள் ,என்பவற்றை பார்க்கும்போது பசி தானாகவே வரும் அதே நேரம் சாப்பிடும் அளவில் கூட சற்று வித்தியாசம் தெரியும் ஏன்? என்று பார்த்தால் அவ் உணவு சமைக்கப்பட்ட விதமாகும் (அம்மா சமைத்த சாப்பாடு ஞாபகம் வருகிறதா?).

அதே போல் மதுபானத்தையும் அருந்தும் போது சில விஷயங்களை கடைப்பிடித்தால் மதுபானத்தின் உண்மையான சுவையையும் அதன் பலத்தையும் அறியலாம்.

மதுபான வகைகள்

  • வைன் - பழங்களிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பியர் - தானியங்கள்,கிழங்கு வகைள்  இருந்து உற்பத்திசெய்யப்படுகிறது.
  • கள்ளு - தென்னை,பனை,கித்துல் மரங்களின் பூவிலிருந்து இயற்கையாக பெறப்படுகிறது 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான மதுபானங்களை சிறந்த தொழிநுட்பத்தினால் காய்ச்ச வடித்து வித்தியாசமான மதுபான வகைகள் தயாரிக்கப்படுகின்றன அவை

  • வைன் -  பிரண்டி ஆகவும்
  • பியர் - விஸ்கி,வெட்கா, ரம்  ஆகவும்
  • கள்ளு -  சாராயம் ஆகவும் தாயரிக்கப்படுகிறது.
இவை தவிர சில நாடுகளில் பால்,கற்றாழை,ஒரு வகை மர சக்கை ,தேன் ஆகியவற்றிலிருந்தும் மதுபானம் தாயரிக்கப்படுகிறது.

கீழே  ஒரு கிளாஸ் மதுபானம் அருந்தும் சில முறைகளை தருகிறேன் ,உங்களுக்கு பிடித்த முறையை Comments  ஊடாக தாருங்கள்
  • வைன்,பீர்,கள்ளு என்பவற்றிற்கு எந்தவித கலவையும் கலக்கத் தேவையில்லை நேரடியாக குடிக்கலாம்
  • விஸ்கி வகைகள்
    • ஐஸ் துண்டுகள்
    • ஸ்பிரைட், / சோடா
    • தேசிகாய் துண்டு
    • சீனி சிறிதளவு கலந்து அருந்திப்பாருங்கள்
  • பிரண்டிவகைகள்
    •  சீனி சிறிதளவு
    • தேசி சாறு இருதுளி
    • கொககொலா என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
  • ஜின் வகைகள்
    • தோடம் சாறு சிறுதுளி
    • முட்டை வெண் கரு சிறிதளவு
    • தேசிச்சாறு சிறுதுளி என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
  • வெட்கா வகைகள்
    • ஹாவி கிறீம் சிறிதளவு (Heavy cream)
    • அன்னாசிப்பழ யூஸ் சிறிதளவு
    • இளநீர்,வழுக்கல்(Coconut Cream)
    • ஐஸ் துண்டுகள் என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
  • ரம் வகைகள்
    • வனிலா சிறு துளி
    • ஒரேஞ் யூஸ்
    • ஐஸ்கிறீம் சிறிதளவு  என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
மேலே கூறப்பட்டவை விட சிலர் தங்களுக்கென்றே விஷேடமான முறைகளை கையாளுகின்றனர்  எப்படி இருப்பினும் மதுபானம் அருந்துவது ஒரு கலையாகும் அதை அனுபவரீதியாகத்தான் பெறவேண்டும்

Monday, May 18, 2015

மனித கல்லீரல் பாதுகாப்பது எப்படி?

மனித கல்லீரல் ஆனது தன்னைதானே புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றல் உள்ள  ஒரு விசித்திரமான முக்கோண வடிவமுள்ள ,மனித உடலில் உள்ள மிகப் பெரிய உறுப்பாகும். இதன் அளவு ஒரு கால்பந்தளவாகும் (Foot Ball size) ,இது கிட்டத்தட்ட 500 விதமான வேலைகளைச் செய்வதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதில்  இரத்தத்தை சுத்திகரிக்கும் தொழிலானது மிக முக்கியமானதாகும்

ஆகவே எமது கல்லீரலை மிக கவனமாக பாதுகாக்கவேண்டிது எமது கடமையாகும்
.

கல்லீரலுக்கு தீங்குவிளைவிப்பவை

  1. பரசிட்டமோல் மாத்திரை (அதிகளவில் உட்கொள்ளப்பட்டால் உயிராபத்து ஏற்படும் இதில் வேறு  600 வகையாக  மாத்திரைகளும்)
  2. மதுபாணம் (ஈரலின் தொழில்பாட்டை குறைத்தல், கல்லீரலில் கொழுப்பு படிவு,ஈரலின் கலங்களை அழித்தல்)
  3. வைரஸ் கிருமி (Hepatitis A,B and C)
  4. சுகாதாரமற்ற பாலியல் உறவு.
  5. கல்லீரல் புற்றுநோய் 
    1. ஈரலில் உருவானவை 
    2. ஈரலுக்கு பரவியவை (Secondary deposit or metastasis )
  6. பித்தக் கற்கள்
  7. உட்கொள்ளும் உணவிலிருந்து அதிகளவான அயன்களை சேமித்துவைத்தல் (Hemochromatosis)
  8. மஞ்சட்காமாலை
  9. விபத்துக்களினால் பாதிக்கப்படல்
  10. சில நோயை குணமாக்க உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் இலை வகைகள்,இலைச்சாறு

அறிகுறிகள் (ஈரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால்

கல்லீரல் நோய்வாய் பட்டால் எமக்கு உடனடியாக தெரியாது ஏனெனில் ஈரல் நோயானது அமைதியாக இருந்து கொண்டு வளரும் தன்மையுடையது  ஆனால் சில அறிகுறிகள் எமது பழக்கவழக்கங்கள் மூலம் அவதானித்தால் குணப்படுத்தலாம் அவற்றில் சில ,
  • மூட்டுக்களில் வலி
  • பசியின்மை
  • சோர்வான நிலை
  •  நீரழிவு 
  • பாலியலில் நாட்டம் குறைதல்
  • இதயம் வலித்தல்
  • கொலஸ்ரோலின் அளவு அதிகரித்தல்
  • தோல் கடி
  • வயிறு வீக்கம்
  • சிறுநீரின் நிறத்தில் மாற்றம்
  • கண்,தோல் மஞ்சலாதல்

கல்லீரலின் தொழில்கள்

  • உட்கொள்ளப்படும் மதுபாணம்,மருந்துகள் ஆகியவற்றின் விசத்தன்மையை அகற்றுதல்
  • விட்டமீன்களை அயன் வடிவத்திற்கு மாற்றி உடம்பில் சேமிக்கிறது
  • சீனியை குளுக்கோசாக மாற்றி உடலில் சேமிக்கிறது
  • இறந்த செங்குருதி கலங்களை அழித்தல்
  • கொழுப்பை உருவாக்கல்
  • இரத்தத்திலுள்ள கழிவுகளை சுத்திகரித்தல்   பல வேலைகளை செய்கின்றது.

கல்லீரலின் ஆரோக்கிய நிலையை அறியும் வழிகள்

  • இரத்தப் பரிசோதனைகள் (Blood Test)
  • கழி ஒலி மூலம் (USS)
  • ஈரலின் உடல் திசு ஆய்வு .(biopsy)
  • நியூக்கிளியர் ஸ்கான்
ஆகவே எமது ஈரல் பாதுகாக்கவேண்டியது எமது கடமையே

கல்லீரலை பாதுகாக்கும் வழிகள்

  1. உட்கொள்ளும் உணவில் மாற்றம்
  2. பாதுகாப்பான பாலியலில் 
  3. தரமான மதுவகைகளை அளவோடு எடுத்தல்
  4. அன்றாடம் உடற்பயிற்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தல்
  5. ஈரல் சம்பந்தமான மேலதீக விபரங்களை வைத்தியர் மூலமே இணையம் மூலமே அறிதல்
  6. உட்கொள்ளும் மாத்திரையின் பக்கவிளைவுகளை அறிந்திருத்தல்
  7. புற்றுநோய் உடம்பில் பரவும் வழிகளை அறிந்திருத்தல்

Monday, April 27, 2015

ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?

உணவு ,உடை ,உறையுள் என்பன வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமான விடயங்களாகும்

இவற்றை அறிவோடும் அளவோடும் வைத்திருந்தால் எமது வாழ்க்கை சொர்க்கமாகும்

கீழே சில அறிவுரைகள் தரப்பட்டுள்ளது 
  • சோடா குறைய ,தண்ணீர் கூட குடித்தல்
  • மதுபாணம் குறைய தேயிலை கூட குடித்தல்
  • சீனி குறைத்து பழவகைகளை கூட சாப்பிடுதல்
  • இறைச்சி வகைகளை குறைத்து மரக்கறி வகைகளை கூட சாப்பிடுதல்
  • வாகணம் ஓட்டுவதை குறைத்து நடையை மேற்கொள்ளல்
  • எந்நேரமும் துக்கத்துடன் முழித்திருக்காமல் சற்று நேரம் நன்றாக தூங்குதல்
  • எந் நேரமும் கோபப்படாமல் சிரிப்பதை அதிகரித்தல்
  • தேவையில்லாமல் அலசுவதை குறைத்து செயல்களில் கவனத்தை அதிகரித்தல்
கடைப்பிடிப்பது கஷ்டம் தான் ஆனால் எந்தவொரு விடத்திலும் அவதானமாக இருங்கள்

Sunday, April 26, 2015

வெற்றி அடைவது எப்படி?

வெற்றி அடைய வேண்டும் என்பது எமது குறிக்கோள் (இலக்கு, இலட்சியம் , குறி , நோக்கம்  , செயல்நோக்கம் , உள்ளெண்ணம் ) ஆக உள்ளது  ஆனால் வெற்றியை இலகுவாகவோ கஷ்டப்பட்டோ   நிறைவேறினால் வெற்றி அடைந்துவிட்டோம் என்று  கூறுகின்றோம்.அந்நேரத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

ஓர் உண்மை தெரியுது அது யாதெனில் வெற்றி என்பது எதிர் காலத்தினை நோக்கியவாறே உள்ளது எனவே வெற்றி என்பது காலத்தின் கையில் தவழுகின்றதொன்றாக இருக்கிறது.

அது மட்டுமல்லாது மனிதனுடைய வெற்றிற்கு காரணிகளாக அவனது
  • புத்தி
  • மனம்
என்பனவற்றின் செயல்பாடுகளில் வெற்றியினால் ஏற்படும் மகிழ்ச்சி தீர்மானிக்கப்படுகிறது எப்படியெனில்

புத்தியால் ஏற்படும் நன்மைகள்

  • வியாபாரத்தில் வெற்றி
  • பரீட்ச்சையில் வெற்றி
  • பழிதீர்ப்பதில் வெற்றி
  • ஆடம்பர வாழ்க்கையில் வெற்றி

புத்தியால் ஏற்படும் தீமை

 செந்த வாழ்க்கையில் தேல்வியடைந்திருப்பார்கள்.

மனத்தினால் ஏற்படும் நன்மைகள்

  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி
  • எதிர்கால சந்ததினருக்கு வழிகாட்டியாக இருத்தல் (அனுபவம்)
  • நிரந்தரமான வெற்றி
  • நண்பர்களை தெளிவாக அறியலாம்.

மனத்தினால் ஏற்படும் தீமை

  • வெற்றியை அடைய பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டி நிலை
வெற்றி எப்படி?
வெற்றி எப்படி?

Thursday, April 16, 2015

காமத்தை வெல்லுவது எப்படி?

முதலில் காமம் என்றால் என்ன? என்பதை பார்ப்போமானால்.

 இது ஒரு உணர்வு பூர்வமான இச்சையாகும். உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் தங்களுடைய இனத்துடன் இணைந்து (ஆண்,பெண்) தமது காமப்பசியை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றிக் கொள்கின்றன.


மனிதர்களைப்பெறுத்த வகையில் நாட்டுக்கு நாடு இக் காம கலாச்சாரம் வேறுபடுகிறது.இதன் காரணமாக பல சமூகப்பிரச்சனைகள் இடம்பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றது.

மனிதனுக்கு காம உணர்வு எங்கிருந்து உதயமாகிறது?,எதனால் வருகிறது? என்ற கேள்விக்கு விடை தெரியுமெனில் காமத்தை கட்டுப்படுத்துவது இலகுவான காரியமாகும், எப்படியோ?


 காமத்தை வெல்லுவது மிக இலகுவான காரியம் அல்ல, அது மிகக் கடினமான காரியமாகும்.

 (உ-ம்) :
கோபக்கார முனிவர் என்றழைக்கபடும் விசுவாமித்திரரே காமத்திற்று அடிமையானதால் ,மிக  பாரதூரமான பல் இன்னல்களை சந்திக்க நேர்ந்ததாக வரலாற்றின் மூலம் அறியலாம்.

ஆதிகாலத்திலிருந்தே காமத்திற்கு பல வரையறைககளை மதங்கள் மூலமாகவும் ,இனங்கள் மூலமாகவும் அமைத்திருந்தனர்
திருவள்ளுவர் கூட காமத்திற்கு வரையறைகளை வகுத்துள்ளார் ஆனால் இக்கால கட்டத்தில் பின்பற்றுவர்கள் எத்தனை பேரோ.

காம உணர்வு வருவதற்கான சில காரணிகள்


  • சில உணவு வகையினால் (வெங்காயம்,முருங்கைக்காய்,....)
  • கலாச்சாரம் (மேலேத்தேய)
  • கல்வி அறிவு இன்மை
  • நண்பர்களின் கூட்டு,காமப்பகிடிகள்,கதைகள்
  • சினிமா
  • சுயசிந்தனை அற்றநிலை
  • பெற்றேர்களின் கவனிப்புகள்

எது? எப்படி? இருப்பினும் மனிதன் தன்னுடைய காம உணர்வை  தனக்குத் தெரிந்த வழியில் புனித மனத்துடன் கட்டுப்படுத்தினால்,மாத்திரமே
 காமத்தை வெல்லாம்.


Saturday, December 13, 2014

ஏன்? எதனால்? எப்படி?

நாம் அன்றாட பொழுதில் சந்திக்கும் எந்தவெரு விடயத்திலும்
  • ஏன்? 
  • எதனால்? 
  • எப்படி? 
என்ற கேள்விகளை நமக்கு நாமே அல்லது மற்றோரிடம் கேட்கும் போது அச்செயலுக்கான , அவ்விடயத்துக்கான உண்மையான காரணத்தை அறியமுடிகிறது.

இதனால் பஞ்ச பூதங்களில் மறைந்திருக்கும் பலதரப்பட்ட இரகசியங்களை விஞ்ஞான பூர்வமாக நிருபிக்ககூடியதாகவுள்ளது.
அது மட்டுமல்லாது ஒவ்வொரு துறையிலும் நிபுணராகவும் முடியும்

ஏன்?, எதனால்?, எப்படி? நன்மை ஏற்படும் துறைகள்

நோய் - மருத்துவம்
சிந்தனை - தத்துவம்
வாசனை,ருசி - சமையல்
உடுப்பு - நெசவு
உணவு - விவசாயம்
ஆகாயம் - ஜோதிடம்,வின்வெளி

Monday, December 8, 2014

எப்படி?

மனதில் ஏதோவெரு சந்தேகம் அல்லது தெளிவு இன்மை போன்ற எண்ணங்கள் எழும்போது எப்படி? என்ற கேள்வியினை கேட்பதன் மூலம் மறைந்திருக்கும் விடையானது வெளிச்சத்திற்கு வருவதை அறியலாம்