முதலில் காமம் என்றால் என்ன? என்பதை பார்ப்போமானால்.
இது ஒரு உணர்வு பூர்வமான இச்சையாகும். உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் தங்களுடைய இனத்துடன் இணைந்து (ஆண்,பெண்) தமது காமப்பசியை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றிக் கொள்கின்றன.
மனிதர்களைப்பெறுத்த வகையில் நாட்டுக்கு நாடு இக் காம கலாச்சாரம் வேறுபடுகிறது.இதன் காரணமாக பல சமூகப்பிரச்சனைகள் இடம்பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றது.
மனிதனுக்கு காம உணர்வு எங்கிருந்து உதயமாகிறது?,எதனால் வருகிறது? என்ற கேள்விக்கு விடை தெரியுமெனில் காமத்தை கட்டுப்படுத்துவது இலகுவான காரியமாகும், எப்படியோ?
காமத்தை வெல்லுவது மிக இலகுவான காரியம் அல்ல, அது மிகக் கடினமான காரியமாகும்.
(உ-ம்) :
கோபக்கார முனிவர் என்றழைக்கபடும் விசுவாமித்திரரே காமத்திற்று அடிமையானதால் ,மிக பாரதூரமான பல் இன்னல்களை சந்திக்க நேர்ந்ததாக வரலாற்றின் மூலம் அறியலாம்.
ஆதிகாலத்திலிருந்தே காமத்திற்கு பல வரையறைககளை மதங்கள் மூலமாகவும் ,இனங்கள் மூலமாகவும் அமைத்திருந்தனர்
திருவள்ளுவர் கூட காமத்திற்கு வரையறைகளை வகுத்துள்ளார் ஆனால் இக்கால கட்டத்தில் பின்பற்றுவர்கள் எத்தனை பேரோ.
காம உணர்வு வருவதற்கான சில காரணிகள்
- சில உணவு வகையினால் (வெங்காயம்,முருங்கைக்காய்,....)
- கலாச்சாரம் (மேலேத்தேய)
- கல்வி அறிவு இன்மை
- நண்பர்களின் கூட்டு,காமப்பகிடிகள்,கதைகள்
- சினிமா
- சுயசிந்தனை அற்றநிலை
- பெற்றேர்களின் கவனிப்புகள்
எது? எப்படி? இருப்பினும் மனிதன் தன்னுடைய காம உணர்வை தனக்குத் தெரிந்த வழியில் புனித மனத்துடன் கட்டுப்படுத்தினால்,மாத்திரமே
காமத்தை வெல்லாம்.